Sheerasāgaram

475 வையத்துவாழ்வீர்காள்! நாமும்நம்பாவைக்கு *
செய்யும்கிரிசைகள் கேளீரோ * பாற்கடலுள்
பையத்துயின்ற பரமனடிபாடி *
நெய்யுண்ணோம்பாலுண்ணோம் நாட்காலேநீராடி *
மையிட்டெழுதோம் மலரிட்டுநாம்முடியோம் *
செய்யாதனசெய்யோம் தீக்குறளைசென்றோதோம் *
ஐயமும்பிச்சையும் ஆந்தனையும்கைகாட்டி *
உய்யுமாறெண்ணி உகந்தேலோரெம்பாவாய்.
1228 சலங்கொண்டஇரணியனது அகல்மார்வம் கீண்டு
தடங்கடலைக்கடைந்த அமுதம்கொண்டுகந்தகாளை *
நலங்கொண்டகருமுகில்போல் திருமேனி அம்மான்
நாள்தோறும்மகிழ்ந்து இனிதுமருவியுறை கோயில் *
சலங்கொண்டுமலர்சொரியும் மல்லிகைஒண்செருந்தி
சண்பகங்கள்மணநாறும் வண்பொழிலினூடே *
வலங்கொண்டு கயலோடிவிளையாடு நாங்கூர்
வைகுந்தவிண்ணகரம் வணங்குமடநெஞ்சே! (2)
1239 வென்றிமிகுநரகனுரமது அழியவிசிறும்
விறலாழித்தடக்கையன், விண்ணவர்கட்கு * அன்று
குன்றுகொடுகுரைகடலைக்கடைந்துஅமுதமளிக்கும்
குருமணிஎன்னாரமுதம்குலவியுறைகோயில் *
என்றுமிகுபெருஞ்செல்வத்து எழில்விளங்கு மறையோர்
ஏழிசையும்கேள்விகளும்இயன்றபெருங் குணத்தோர் *
அன்றுஉலகம்படைத்தவனையனையவர்கள்நாங்கூர்
அரிமேயவிண்ணகரம்வணங்குமடநெஞ்சே!
2066 கல்லுயர்ந்தநெடுமதிள்சூழ்கச்சிமேய
களிறு! என்றும் கடல்கிடந்தகனியே! என்றும் *
அல்லியம்பூமலர்ப்பொய்கைப்பழனவேலி
அணியழுந்தூர்நின்றுகந்தஅம்மான்! என்றும் *
சொல்லுயர்ந்தநெடுவீணைமுலைமேல்தாங்கித்
தூமுறுவல்நகைஇறையேதோன்றநக்கு *
மெல்விரல்கள்சிவப்பெய்தத்தடவிஆங்கே
மென்கிளிபோல்மிகமிழற்றும்என்பேதையே. (2)
2685 - ஆழிநீர்
ஆரால்கடைந்திடப்பட்டது? * - அவன்காண்மின்
ஊராநிரைமேய்த்து உலகெல்லாமுண்டுமிழ்ந்தும் *
ஆராததன்மையனாய் ஆங்கொருநாளாய்ப்பாடி *
சீரார்கலயல்குல் சீரடிசெந்துவர்வாய் *
வாரார்வனமுலையாள் மத்தாரப்பற்றிக்கொண்டு *
ஏராரிடைநோவ எத்தனையோர்போதுமாய் *
சீரார்தயிர்கடைந்து வெண்ணெய்திரண்டதனை *
வேரார்நுதல்மடவாள் வேறோர்கலத்திட்டு *
நாராருறியேற்றி நன்கமையவைத்ததனை *
போரார்வேற்கண்மடவாள் போந்தனையும்பொய்யுறக்கம் *
ஓராதவன்போல் உறங்கியறிவுற்று *
தாரார்தடந்தோள்கள் உள்ளளவும்கைநீட்டி *
ஆராதவெண்ணெய்விழுங்கி *