2nd Thiruvandāthi

இரண்டாம் திருவந்தாதி

2nd Thiruvandāthi

Bhūtattāzhvār, the second among the Mudhalāzhvārkaḷ (the first three Āzhvārs, namely Poykai Āzhvār, Bhūtattāzhvār, and Peyāzhvār), experienced the special qualities of the Lord, divined a beautiful prabandham named 2nd Thiruvandāthi. Through the Lord's grace, his intense devotion matured into a state of supreme knowledge

+ Read more

முதலாழ்வார்களில் இரண்டாவதாகத் திகழும் பூதத்தாழ்வார் அருளிச்செய்த இரண்டாம் திருவந்தாதி நூறு பாசுரங்களை உடையது. பொய்கையாழ்வாருடன் கூடியிருந்து எம்பெருமான் குணவிசேஷங்களை அனுபவித்த இவ்வாழ்வார் எம்பெருமானின் அருளால் தனக்கு இருந்த பரபக்தியானது முதிர்ந்து பரஜ்ஞான தசையை அடைய, எம்பெருமானின்

+ Read more
Group: 3rd 1000
Verses: 2182 to 2281
Glorification: Para / Omnipresent State (பரத்வம்)
  • தனியன் / Taniyan
  • IT 1
    2182 ## அன்பே தகளியா * ஆர்வமே நெய் ஆக *
    இன்பு உருகு சிந்தை இடு திரியா ** நன்பு உருகி
    ஞானச் சுடர் விளக்கு ஏற்றினேன் * நாரணற்கு *
    ஞானத் தமிழ் புரிந்த நான் 1
  • IT 2
    2183 ஞானத்தால் நன்கு உணர்ந்து * நாரணன் தன் நாமங்கள் *
    தானத்தால் மற்று அவன் பேர் சாற்றினால் ** வானத்து
    அணி அமரர் * ஆக்குவிக்கும் அஃது அன்றே * நங்கள்
    பணி அமரர் கோமான் பரிசு 2
  • IT 3
    2184 பரிசு நறு மலரால் * பாற்கடலான் பாதம் *
    புரிவார் புகப்பெறுவர் போலாம் ** புரிவார்கள்
    தொல் அமரர் கேள்வித் * துலங்கு ஒளி சேர் தோற்றத்து *
    நல் அமரர் கோமான் நகர் 3
  • IT 4
    2185 நகர் இழைத்து நித்திலத்து * நாண் மலர் கொண்டு * ஆங்கே
    திகழும் மணி வயிரம் சேர்த்து ** நிகர் இல்லாப்
    பைங் கமலம் ஏந்திப் * பணிந்தேன் பனி மலராள் *
    அங்கம் வலம் கொண்டான் அடி 4
  • IT 5
    2186 அடி மூன்றில் இவ் உலகம் * அன்று அளந்தாய் போலும் *
    அடி மூன்று இரந்து அவனி கொண்டாய் ** படி நின்ற
    நீர் ஓத மேனி * நெடுமாலே! * நின் அடியை
    யார் ஓத வல்லார் அறிந்து? 5
  • IT 6
    2187 அறிந்து ஐந்தும் உள் அடக்கி * ஆய் மலர் கொண்டு * ஆர்வம்
    செறிந்த மனத்தராய் செவ்வே ** அறிந்து அவன் தன்
    பேர் ஓதி ஏத்தும் * பெருந்தவத்தோர் காண்பரே *
    கார் ஓத வண்ணன் கழல் 6
  • IT 7
    2188 கழல் எடுத்து வாய் மடித்துக் * கண் சுழன்று * மாற்றார்
    அழல் எடுத்த சிந்தையராய் அஞ்ச ** தழல் எடுத்த
    போர் ஆழி ஏந்தினான் * பொன் மலர்ச் சேவடியை *
    ஓர் ஆழி நெஞ்சே! உகந்து 7
  • IT 8
    2189 உகந்து உன்னை வாங்கி * ஒளி நிறம் கொள் கொங்கை *
    அகம் குளிர உண் என்றாள் ஆவி ** உகந்து
    முலை உண்பாய் போலே * முனிந்து உண்டாய் * நீயும்
    அலை பண்பால் ஆனமையால் அன்று 8
  • IT 9
    2190 அன்று அதுகண்டு அஞ்சாத * ஆய்ச்சி உனக்கு இரங்கி *
    நின்று முலை தந்த இந் நீர்மைக்கு ** அன்று
    வரன்முறையால் நீ அளந்த * மா கடல் சூழ் ஞாலம் *
    பெரு முறையால் எய்துமோ பேர்த்து? 9
  • IT 10
    2191 பேர்த்தனை * மா சகடம் பிள்ளையாய் * மண் இரந்து
    காத்தனை * பல் உயிரும் காவலனே ** ஏத்திய
    நா உடையேன் பூ உடையேன் * நின் உள்ளி நின்றமையால் *
    காவடியேன் பட்ட கடை 10
  • IT 11
    2192 கடை நின்று அமரர் கழல் தொழுது ** நாளும்
    இடை நின்ற * இன்பத்தராவர் ** படை நின்ற
    நீரோத மேனி * நெடுமாலே ! * நின் அடியை
    யாரோத வல்லார் அவர் ? 11
  • IT 12
    2193 அவர் இவர் என்று இல்லை * அரவு அணையான் பாதம் *
    எவர் வணங்கி ஏத்தாதார் எண்ணில் ** பவரும்
    செழும் கதிரோன் ஒண் மலரோன் * கண்ணுதலோன் அன்றே? *
    தொழும் தகையார் நாளும் தொடர்ந்து 12
  • IT 13
    2194 தொடர் எடுத்த மால் யானை * சூழ் கயம் புக்கு அஞ்சி *
    படர் எடுத்த பைங் கமலம் கொண்டு ** அன்று இடர் அடுக்க
    ஆழியான் * பாதம் பணிந்து அன்றே? * வானவர் கோன்
    பாழி தான் எய்திற்று பண்டு 13
  • IT 14
    2195 பண்டிப் பெரும் பதியை ஆக்கி * பழி பாவம்
    கொண்டு * இங்கு வாழ்வாரைக் கூறாதே ** எண் திசையும்
    பேர்த்த கரம் நான்கு உடையான் * பேர் ஓதி பேதைகாள் *
    தீர்த்தகரர் ஆமின் திரிந்து 14
  • IT 15
    2196 திரிந்தது வெம் சமத்துத் * தேர் கடவி * அன்று
    பிரிந்தது * சீதையை மான் பின் போய் ** புரிந்ததுவும்
    கண் பள்ளிகொள்ள * அழகியதே * நாகத்தின்
    தண் பள்ளி கொள்வான் தனக்கு 15
  • IT 16
    2197 தனக்கு அடிமை பட்டது * தான் அறியானேலும் *
    மனத்து அடைய வைப்பது ஆம் மாலை ** வனத் திடரை
    ஏரி ஆம் வண்ணம் * இயற்றும் இது அல்லால் *
    மாரி யார் பெய்கிற்பார் மற்று ? 16
  • IT 17
    2198 மற்று ஆர் இயல் ஆவர் * வானவர் கோன் மா மலரோன் *
    சுற்றும் வணங்கும் தொழிலானை ** ஒற்றைப்
    பிறை இருந்த * செஞ்சடையான் பின் சென்று * மாலைக்
    குறை இரந்து தான் முடித்தான் கொண்டு 17
  • IT 18
    2199 கொண்டது உலகம் * குறள் உருவாய் கோளரியாய் *
    ஒண் திறலோன் மார்வத்து உகிர் வைத்தது ** உண்டதுவும்
    தான் கடந்த ஏழ் உலகே * தாமரைக்கண் மால் ஒரு நாள் *
    வான் கடந்தான் செய்த வழக்கு 18
  • IT 19
    2200 வழக்கு அன்று கண்டாய் * வலி சகடம் செற்றாய் *
    வழக்கு என்று நீ மதிக்க வேண்டா ** குழக் கன்று
    தீ விளவின் காய்க்கு எறிந்த * தீமை திருமாலே! *
    பார் விளங்கச் செய்தாய் பழி 19
  • IT 20
    2201 பழி பாவம் கையகற்றிப் * பல் காலும் நின்னை *
    வழிவாழ்வார் வாழ்வராம் மாதோ ** வழு இன்றி
    நாரணன் தன் நாமங்கள் * நன்கு உணர்ந்து நன்கு ஏத்தும் *
    காரணங்கள் தாம் உடையார் தாம் 20
  • IT 21
    2202 தாம் உளரே * தம் உள்ளம் உள் உளதே * தாமரையின்
    பூ உளதே * ஏத்தும் பொழுது உண்டே ** வாமன்
    திரு மருவு * தாள் மருவு சென்னியரே * செவ்வே
    அரு நரகம் சேர்வது அரிது 21
  • IT 22
    2203 அரியது எளிது ஆகும் * ஆற்றலால் மாற்றி *
    பெருக முயல்வாரைப் பெற்றால் ** கரியது ஓர்
    வெண் கோட்டு மால் யானை * வென்று முடித்தன்றே *
    தண் கோட்டு மா மலரால் தாழ்ந்து 22
  • IT 23
    2204 தாழ்ந்து வரம் கொண்டு * தக்க வகைகளால் *
    வாழ்ந்து கழிவாரை வாழ்விக்கும் ** தாழ்ந்த
    விளங் கனிக்குக் * கன்று எறிந்து வேற்று உருவாய் * ஞாலம்
    அளந்து அடிக்கீழ்க் கொண்ட அவன் 23
  • IT 24
    2205 அவன் கண்டாய் நல் நெஞ்சே * ஆர் அருளும் கேடும் *
    அவன் கண்டாய் ஐம்புலனாய் நின்றான் ** அவன் கண்டாய்
    காற்று தீ நீர் வான் * கரு வரை மண் கார் ஓதச் *
    சீற்றத் தீ ஆவானும் சென்று 24
  • IT 25
    2206 சென்றது இலங்கைமேல் * செவ்வே தன் சீற்றத்தால் *
    கொன்றது இராவணனை கூறுங்கால் ** நின்றதுவும்
    வேய் ஓங்கு தண் சாரல் * வேங்கடமே * விண்ணவர் தம்
    வாய் ஓங்கு தொல் புகழான் வந்து 25
  • IT 26
    2207 வந்தித்து அவனை * வழி நின்ற ஐம்பூதம் *
    ஐந்தும் அகத்து அடக்கி ஆர்வமாய் ** உந்திப்
    படி அமரர் வேலையான் * பண்டு அமரர்க்கு ஈந்த *
    படி அமரர் வாழும் பதி 26
  • IT 27
    2208 பதி அமைந்து நாடிப் * பருத்து எழுந்த சிந்தை *
    மதி உரிஞ்சி வான் முகடு நோக்கி ** கதி மிகுத்து அம்
    கோல் தேடி ஓடும் * கொழுந்ததே போன்றதே *
    மால் தேடி ஓடும் மனம் 27
  • IT 28
    2209 மனத்து உள்ளான் வேங்கடத்தான் * மா கடலான் * மற்றும்
    நினைப்பு அரிய * நீள் அரங்கத்து உள்ளான் ** எனைப் பலரும்
    தேவாதி தேவன் * எனப்படுவான் * முன் ஒரு நாள்
    மா வாய் பிளந்த மகன் 28
  • IT 29
    2210 மகனாகக் கொண்டு எடுத்தாள் * மாண்பு ஆய கொங்கை *
    அகன் ஆர உண்பன் என்று உண்டு ** மகனைத் தாய்
    தேறாத வண்ணம் * திருத்தினாய் * தென் இலங்கை
    நீறு ஆக எய்து அழித்தாய்! நீ 29
  • IT 30
    2211 நீ அன்று உலகு அளந்தாய் * நீண்ட திருமாலே! *
    நீ அன்று உலகு இடந்தாய் என்பரால் ** நீ அன்று
    கார் ஓதம் முன் கடைந்து * பின் அடைத்தாய் மா கடலை *
    பேர் ஓத மேனிப் பிரான்! 30
  • IT 31
    2212 பிரான் என்றும் நாளும் * பெரும் புலரி என்றும் *
    குரா நல் செழும் போது கொண்டு ** வராகத்து
    அணி உருவன் * பாதம் பணியும் அவர் கண்டீர் *
    மணி உருவம் காண்பார் மகிழ்ந்து 31
  • IT 32
    2213 மகிழ்ந்தது சிந்தை * திருமாலே * மற்றும்
    மகிழ்ந்தது * உன் பாதமே போற்றி ** மகிழ்ந்தது
    அழல் ஆழி சங்கம் * அவை பாடி ஆடும் *
    தொழில் ஆகம் சூழ்ந்து துணிந்து 32
  • IT 33
    2214 துணிந்தது சிந்தை * துழாய் அலங்கல் * அங்கம்
    அணிந்தவன் பேர் * உள்ளத்துப் பல்கால் ** பணிந்ததுவும்
    வேய் பிறங்கு சாரல் * விறல் வேங்கடவனையே *
    வாய் திறங்கள் சொல்லும் வகை 33
  • IT 34
    2215 வகையால் அவனி * இரந்து அளந்தாய் பாதம் *
    புகையால் நறு மலரால் முன்னே ** மிக வாய்ந்த
    அன்பு ஆக்கி ஏத்தி * அடிமைப்பட்டேன் உனக்கு *
    என் பாக்கியத்தால் இனி 34
  • IT 35
    2216 இனிது என்பர் காமம் * அதனிலும் ஆற்ற *
    இனிது என்பர் தண்ணீரும் எந்தாய் ** இனிது என்று
    காமம் நீர் வேளாது * நின் பெருமை வேட்பரேல் *
    சேம நீர் ஆகும் சிறிது 35
  • IT 36
    2217 சிறியார் பெருமை * சிறிதின் கண் எய்தும் *
    அறியாரும் தாம் அறியார் ஆவர் ** அறியாமை
    மண் கொண்டு மண் உண்டு * மண் உமிழ்ந்த மாயன் என்று *
    எண் கொண்டு என் நெஞ்சே ! இரு 36
  • IT 37
    2218 இரும் தண் கமலத்து * இரு மலரின் உள்ளே *
    திருந்து திசைமுகனைத் தந்தாய் ** பொருந்திய நின்
    பாதங்கள் ஏத்திப் * பணியாவேல் * பல் பிறப்பும்
    ஏதங்கள் எல்லாம் எமக்கு 37
  • IT 38
    2219 எமக்கு என்று இரு நிதியம் * ஏமாந்து இராதே *
    தமக்கு என்றும் சார்வம் அறிந்து ** நமக்கு என்றும்
    மாதவனே என்னும் * மனம் படைத்து * மற்று அவன் பேர்
    ஓதுவதே நாவினால் ஓத்து 38
  • IT 39
    2220 ஓத்தின் பொருள் முடிவும் இத்தனையே * உத்தமன் பேர்
    ஏத்தும் * திறம் அறிமின் ஏழைகாள் ** ஓத்து அதனை
    வல்லீரேல் * நன்று அதனை மாட்டீரேல் * மாதவன் பேர்
    சொல்லுவதே ஓத்தின் சுருக்கு 39
  • IT 40
    2221 சுருக்காக வாங்கி * சுலாவி நின்று * ஐயார்
    நெருக்கா முன் * நீர் நினைமின் கண்டீர் ** திருப் பொலிந்த
    ஆகத்தான் * பாதம் அறிந்தும் அறியாத *
    போகத்தால் இல்லை பொருள் 40
  • IT 41
    2222 பொருளால் அமர் உலகம் * புக்கு இயலல் ஆகாது *
    அருளால் அறம் அருளும் அன்றே ? ** அருளாலே
    மா மறையோர்க்கு ஈந்த * மணிவண்ணன் பாதமே *
    நீ மறவேல் நெஞ்சே! நினை 41
  • IT 42
    2223 நினைப்பன் திருமாலை * நீண்ட தோள் காண *
    நினைப்பார் பிறப்பு ஒன்றும் நேரார் ** மனைப்பால்
    பிறந்தார் பிறந்து எய்தும் * பேரின்பம் எல்லாம் *
    துறந்தார் தொழுதார் அத் தோள் 42
  • IT 43
    2224 தோள் இரண்டு எட்டு ஏழும் * மூன்றும் முடி அனைத்தும் *
    தாள் இரண்டும் வீழச் * சரம் துரந்தான் ** தாள் இரண்டும்
    ஆர் தொழுவார் பாதம் * அவை தொழுவது அன்றே ? * என்
    சீர் கெழு தோள் செய்யும் சிறப்பு 43
  • IT 44
    2225 சிறந்தார்க்கு எழு துணையாம் * செங்கண் மால் நாமம் *
    மறந்தாரை மானிடமா வையேன் ** அறம் தாங்கும்
    மாதவனே! என்னும் * மனம் படைத்து * மற்று அவன்பேர்
    ஓதுவதே நாவினால் உள்ளு 44
  • IT 45
    2226 உளது என்று இறுமாவார் * உண்டு இல்லை என்று *
    தளர்தல் அதன் அருகும் சாரார் ** அளவு அரிய
    வேதத்தான் வேங்கடத்தான் * விண்ணோர் முடி தோயும் *
    பாதத்தான் பாதம் பயின்று 45
  • IT 46
    2227 பயின்றது அரங்கம் திருக்கோட்டி * பல் நாள்
    பயின்றதுவும் * வேங்கடமே பல்நாள் ** பயின்றது
    அணி திகழும் சோலை * அணி நீர் மலையே *
    மணி திகழும் வண் தடக்கை மால் 46
  • IT 47
    2228 மாலை அரி உருவன் * பாதமலர் அணிந்து *
    காலை தொழுது எழுமின் கைகோலி ** ஞாலம்
    அளந்து இடந்து உண்டு உமிழ்ந்த * அண்ணலை மற்று அல்லால் *
    உளம் கிடந்த ஆற்றால் உணர்ந்து 47
  • IT 48
    2229 உணர்ந்தாய் மறை நான்கும் * ஓதினாய் நீதி *
    மணந்தாய் மலர் மகள் தோள் மாலே ** மணந்தாய் போய்
    வேய் இரும் சாரல் * வியல் இரு ஞாலம் சூழ் *
    மா இரும் சோலை மலை 48
  • IT 49
    2230 மலை ஏழும் * மா நிலங்கள் ஏழும் அதிர *
    குலை சூழ் குரை கடல்கள் ஏழும் ** முலை சூழ்ந்த
    நஞ்சு உரத்துப் பெண்ணை * நவின்று உண்ட நாவன் என்று *
    அஞ்சாது என்நெஞ்சே அழை 49
  • IT 50
    2231 அழைப்பன் திருமாலை * ஆங்கு அவர்கள் சொன்ன *
    பிழைப்பு இல் பெரும் பெயரே பேசி ** இழைப்பு அரிய
    ஆயவனே! யாதவனே ! * என்றவனை யார் முகப்பும் *
    மாயவனே ! என்று மதித்து 50
  • IT 51
    2232 மதிக் கண்டாய் நெஞ்சே ! * மணிவண்ணன் பாதம் *
    மதிக் கண்டாய் மற்று அவன் பேர் தன்னை ** மதிக் கண்டாய்
    பேர் ஆழிநின்று * பெயர்ந்து கடல் கடைந்த
    நீர் ஆழி வண்ணன் நிறம் 51
  • IT 52
    2233 நிறம் கரியன் * செய்ய நெடு மலராள் மார்வன் *
    அறம் பெரியன் ஆர் அது அறிவார் ? ** மறம் புரிந்த
    வாள் அரக்கன் போல்வானை * வானவர் கோன் தானத்து *
    நீள் இருக்கைக்கு உய்த்தான் நெறி 52
  • IT 53
    2234 நெறியார் குழல் கற்றை * முன்நின்று பின் தாழ்ந்து *
    அறியாது இளங் கிரி என்று எண்ணி ** பிரியாது
    பூங்கொடிக்கள் வைகும் * பொரு புனல் குன்று என்னும் *
    வேங்கடமே யாம் விரும்பும் வெற்பு 53
  • IT 54
    2235 வெற்பு என்று இரும் சோலை * வேங்கடம் என்று இவ் இரண்டும் *
    நிற்பு என்று நீ மதிக்கும் நீர்மை போல் ** நிற்பு என்று
    உளம் கோயில் * உள்ளம் வைத்து உள்ளினேன் * வெள்ளத்து
    இளங் கோயில் கைவிடேல் என்று 54
  • IT 55
    2236 என்றும் மறந்தறியேன் * ஏழ் பிறப்பும் எப்பொழுதும் *
    நின்று நினைப்பு ஒழியா நீர்மையால் ** வென்றி
    அடல் ஆழி கொண்ட * அறிவனே! * இன்பக்
    கடல் ஆழி நீ அருளிக் காண் 55
  • IT 56
    2237 காணக் கழி காதல் * கைமிக்குக் காட்டினால் *
    நாணப்படும் என்றால் நாணுமே? ** பேணிக்
    கரு மாலைப் * பொன் மேனி காட்டாமுன் காட்டும் *
    திருமாலை நங்கள் திரு 56
  • IT 57
    2238 திருமங்கை நின்றருளும் * தெய்வம் நா வாழ்த்தும் *
    கருமம் கடைப்பிடிமின் கண்டீர் ** உரிமையால்
    ஏத்தினோம் பாதம் * இருந் தடக்கை எந்தை பேர் *
    நால் திசையும் கேட்டீரே? நாம் 57
  • IT 58
    2239 நாம் பெற்ற நன்மையும் * நா மங்கை நல் நெஞ்சத்து *
    ஓம்பி இருந்து எம்மை ஓதுவித்து ** வேம்பின்
    பொருள் நீர்மை ஆயினும் * பொன் ஆழி பாடு என்று *
    அருள் நீர்மை தந்த அருள் 58
  • IT 59
    2240 அருள் புரிந்த சிந்தை * அடியார்மேல் வைத்து *
    பொருள் தெரிந்து காண்குற்ற அப்போது ** இருள் திரிந்து
    நோக்கினேன் நோக்கி * நினைந்தேன் அது ஒண் கமலம் *
    ஓக்கினேன் என்னையும் அங்கு ஓர்ந்து 59
  • IT 60
    2241 ஓர் உருவன் அல்லை * ஒளி உருவம் நின் உருவம் *
    ஈர் உருவன் என்பர் இரு நிலத்தோர் ** ஓர் உருவம்
    ஆதியாம் வண்ணம் * அறிந்தார் அவர் கண்டீர் *
    நீதியால் மண் காப்பார் நின்று 60
  • IT 61
    2242 நின்றது ஓர் பாதம் * நிலம் புதைப்ப * நீண்ட தோள்
    சென்று அளந்தது என்பர் திசை எல்லாம் ** அன்று
    கரு மாணியாய் * இரந்த கள்வனே! * உன்னைப்
    பிரமாணித்தார் பெற்ற பேறு! 61
  • IT 62
    2243 பேறு ஒன்றும் முன் அறியேன் * பெற்று அறியேன் பேதைமையால் *
    மாறு என்று சொல்லி வணங்கினேன் ** ஏறின்
    பெருத்தெருத்தம் கோடு ஒசிய * பெண் நசையின் பின் போய் *
    எருத்து இறுத்த நல் ஆயர் ஏறு 62
  • IT 63
    2244 ஏறு ஏழும் * வென்று அடர்த்த எந்தை * எரி உருவத்து
    ஏறு ஏறி * பட்ட இடுசாபம் ** பாறு ஏறி
    உண்ட தலை வாய் நிறையக் * கோட்டு அம் கை ஒண் குருதி *
    கண்ட பொருள் சொல்லின் கதை 63
  • IT 64
    2245 கதையும் பெரும் பொருளும் கண்ணா ! * நின் பேரே
    இதயம் * இருந்தவையே ஏத்தில் ** கதையும்
    திருமொழியாய் நின்ற * திருமாலே ! * உன்னைப்
    பரு மொழியால் காணப் பணி 64
  • IT 65
    2246 பணிந்தேன் திருமேனி * பைங் கமலம் கையால் *
    அணிந்தேன் உன் சேவடிமேல் அன்பாய் ** துணிந்தேன்
    புரிந்து ஏத்தி * உன்னை புகலிடம் பார்த்து * ஆங்கே
    இருந்து ஏத்தி வாழும் இது 65
  • IT 66
    2247 இது கண்டாய் நல் நெஞ்சே ! * இப் பிறவி ஆவது *
    இது கண்டாய் எல்லாம் நாம் உற்றது ** இது கண்டாய்
    நாரணன் பேர் ஓதி * நரகத்து அருகு அணையா *
    காரணமும் வல்லையேல் காண் 66
  • IT 67
    2248 கண்டேன் திருமேனி * யான் கனவில் * ஆங்கு அவன் கைக்
    கண்டேன் * கனலும் சுடர் ஆழி ** கண்டேன்
    உறு நோய் வினை இரண்டும் * ஓட்டுவித்து * பின்னும்
    மறு நோய் செறுவான் வலி 67
  • IT 68
    2249 வலி மிக்க வாள் எயிற்று * வாள் அவுணர் மாள *
    வலி மிக்க வாள் வரை மத்து ஆக * வலி மிக்க
    வாள் நாகம் சுற்றி * மறுகக் கடல் கடைந்தான் *
    கோள் நாகம் கொம்பு ஒசித்த கோ 68
  • IT 69
    2250 கோ ஆகி * மா நிலம் காத்து * நம் கண் முகப்பே
    மா ஏகிச் செல்கின்ற மன்னவரும் ** பூ மேவும்
    செங் கமல நாபியான் * சேவடிக்கே ஏழ் பிறப்பும் *
    தண் கமலம் ஏய்ந்தார் தமர் 69
  • IT 70
    2251 தமர் உள்ளம் தஞ்சை * தலை அரங்கம் தண்கால் *
    தமர் உள்ளும் தண் பொருப்பு வேலை ** தமர் உள்ளும்
    மாமல்லை கோவல் * மதிள் குடந்தை என்பரே *
    ஏ வல்ல எந்தைக்கு இடம் 70
  • IT 71
    2252 இடங்கை வலம்புரி நின்று ஆர்ப்ப * எரி கான்று
    அடங்கார் * ஒடுங்குவித்தது ஆழி ** விடம் காலும்
    தீ வாய் அரவு அணைமேல் * தோன்றல் திசை அளப்பான் *
    பூ ஆர் அடி நிமிர்த்த போது 71
  • IT 72
    2253 போது அறிந்து வானரங்கள் * பூஞ்சுனை புக்கு * ஆங்கு அலர்ந்த
    போது அரிந்துகொண்டு ஏத்தும் போது ** உள்ளம் போது
    மணி வேங்கடவன் * மலர் அடிக்கே செல்ல *
    அணி வேங்கடவன் பேர் ஆய்ந்து 72
  • IT 73
    2254 ஆய்ந்து உரைப்பன் ஆயிரம் பேர் * ஆதி நடு அந்திவாய் *
    வாய்ந்த மலர் தூவி வைகலும் ** ஏய்ந்த
    பிறைக் கோட்டுச் * செங்கண் கரி விடுத்த பெம்மான் *
    இறைக்கு ஆட்படத் துணிந்த யான் 73
  • IT 74
    2255 யானே தவம் செய்தேன் * ஏழ் பிறப்பும் எப்பொழுதும் *
    யானே தவம் உடையேன் எம் பெருமான் ! ** யானே
    இருந்த தமிழ் நல் மாலை * இணை அடிக்கே சொன்னேன் *
    பெருந் தமிழன் நல்லேன் பெருகு 74
  • IT 75
    2256 பெருகு மத வேழம் * மாப் பிடிக்கு முன் நின்று *
    இரு கண் இள மூங்கில் வாங்கி ** அருகு இருந்த
    தேன் கலந்து நீட்டும் * திருவேங்கடம் கண்டீர் *
    வான் கலந்த வண்ணன் வரை 75
  • IT 76
    2257 வரைச் சந்தனக் குழம்பும் * வான் கலனும் பட்டும் *
    விரைப் பொலிந்த வெண் மல்லிகையும் நிரைத்துக்கொண்டு **
    ஆதிக்கண் நின்ற * அறிவன் அடி இணையே *
    ஓதிப் பணிவது உறும் 76
  • IT 77
    2258 உறும் கண்டாய் நல் நெஞ்சே ! * உத்தமன் நல் பாதம் *
    உறும் கண்டாய் ஒண் கமலம் தன்னால் ** உறும் கண்டாய்
    ஏத்திப் பணிந்து அவன் பேர் * ஈர் ஐஞ்ஞூறு எப்பொழுதும் *
    சாற்றி உரைத்தல் தவம் 77
  • IT 78
    2259 தவம் செய்து * நான் முகனே பெற்றான் * தரணி
    நிவந்து அளப்ப * நீட்டிய பொன் பாதம் ** சிவந்த தன்
    கை அனைத்தும் * ஆரக் கழுவினான் * கங்கை நீர்
    பெய்து அனைத்துப் பேர் மொழிந்து பின் 78
  • IT 79
    2260 பின் நின்று * தாய் இரப்ப கேளான் * பெரும் பணைத் தோள்
    முன் நின்று * தான் இரப்பாள் மொய்ம் மலராள் ** சொல் நின்ற
    தோள் நலத்தான் * நேர் இல்லாத் தோன்றல் * அவன் அளந்த
    நீள் நிலம் தான் அத்தனைக்கும் நேர் 79
  • IT 80
    2261 நேர்ந்தேன் அடிமை * நினைந்தேன் அது ஒண் கமலம் *
    ஆர்ந்தேன் உன் சேவடிமேல் அன்பாய் ** ஆர்ந்த
    அடிக் கோலம் * கண்டவர்க்கு என்கொலோ * முன்னைப்
    படிக் கோலம் கண்ட பகல்? 80
  • IT 81
    2262 பகல் கண்டேன் * நாரணனைக் கண்டேன் * கனவில்
    மிகக் கண்டேன் * மீண்டு அவனை மெய்யே மிகக் கண்டேன் **
    ஊன் திகழும் நேமி * ஒளி திகழும் சேவடியான் *
    வான் திகழும் சோதி வடிவு 81
  • IT 82
    2263 வடிக் கோல வாள் நெடுங் கண் * மா மலராள் * செவ்விப்
    படிக் கோலம் கண்டு அகலாள் பல்நாள் ** அடிக்கோலி
    ஞாலத்தாள் * பின்னும் நலம் புரிந்தது என்கொலோ? *
    கோலத்தால் இல்லை குறை 82
  • IT 83
    2264 குறையாக வெஞ் சொற்கள் * கூறினேன் கூறி *
    மறை ஆங்கு என உரைத்த மாலை ** இறையேனும்
    ஈயும்கொல் ! என்றே * இருந்தேன் எனைப் பகலும் *
    மாயன்கண் சென்ற வரம் 83
  • IT 84
    2265 வரம் கருதி தன்னை * வணங்காத வன்மை *
    உரம் கருதி மூர்க்கத்தவனை ** நரம் கலந்த
    சிங்கமாய்க் கீண்ட * திருவன் அடி இணையே *
    அம் கண் மா ஞாலத்து அமுது 84
  • IT 85
    2266 அமுது என்றும் தேன் என்றும் * ஆழியான் என்றும் *
    அமுது அன்று கொண்டு உகந்தான் என்றும் ** அமுது அன்ன
    சொல் மாலை ஏத்தித் * தொழுதேன் சொலப்பட்ட *
    நல் மாலை ஏத்தி நவின்று 85
  • IT 86
    2267 நவின்று உரைத்த நாவலர்கள் * நாள் மலர் கொண்டு * ஆங்கே
    பயின்றதனால் பெற்ற பயன் என்கொல்? ** பயின்றார் தம்
    மெய்த் தவத்தால் * காண்பு அரிய மேக மணி வண்ணனை * யான்
    எத் தவத்தால் காண்பன் கொல் இன்று? 86
  • IT 87
    2268 இன்றா அறிகின்றேன் அல்லேன் * இரு நிலத்தைச்
    சென்று ஆங்கு அளந்த திருவடியை ** அன்று
    கருக்கோட்டியுள் கிடந்து * கைதொழுதேன் கண்டேன் *
    திருக்கோட்டி எந்தை திறம் 87
  • IT 88
    2269 திறம்பிற்று இனி அறிந்தேன் * தென் அரங்கத்து எந்தை *
    திறம்பா வழிச் சென்றார்க்கு அல்லால் ** திறம்பாச்
    செடி நரகை நீக்கி * தாம் செல்வதன் முன் * வானோர்
    கடி நகர வாசல் கதவு 88
  • IT 89
    2270 கதவி கதம் சிறந்த * கஞ்சனை முன் காய்ந்து *
    அதவி போர் யானை ஒசித்து ** பதவியாய்ப்
    பாணியால் நீர் ஏற்றுப் * பண்டு ஒருகால் மாவலியை *
    மாணியாய்க் கொண்டிலையே மண்? 89
  • IT 90
    2271 மண்ணுலகம் ஆளேனே ? * வானவர்க்கும் வானவனாய் *
    விண்ணுலகம் தன் அகத்தும் மேவேனே? ** நண்ணித்
    திருமாலைச் * செங்கண் நெடியானை * எங்கள்
    பெருமானைக் கை தொழுத பின் 90
  • IT 91
    2272 பின்னால் அரு நரகம் * சேராமல் பேதுறுவீர் *
    முன்னால் வணங்க முயல்மினோ ** பல் நூல்
    அளந்தானைக் * கார்க் கடல் சூழ் ஞாலத்தை * எல்லாம்
    அளந்தான் அவன் சேவடி 91
  • IT 92
    2273 அடியால் முன் கஞ்சனைச் செற்று * அமரர் ஏத்தும்
    படியான் * கொடிமேல் புள் கொண்டான் ** நெடியான் தன்
    நாமமே * ஏத்துமின்கள் ஏத்தினால் * தாம் வேண்டும்
    காமமே காட்டும் கடிது 92
  • IT 93
    2274 கடிது கொடு நரகம் * பிற்காலும் செய்கை *
    கொடிது என்று அது கூடா முன்னம் ** வடி சங்கம்
    கொண்டானைக் * கூந்தல் வாய் கீண்டானை * கொங்கை நஞ்சு
    உண்டானை ஏத்துமினோ உற்று 93
  • IT 94
    2275 உற்று வணங்கித் தொழுமின் * உலகு ஏழும்
    முற்றும் விழுங்கும் முகில் வண்ணன் ** பற்றிப்
    பொருந்தாதான் மார்பு இடந்து * பூம் பாடகத்துள்
    இருந்தானை * ஏத்தும் என் நெஞ்சு 94
  • IT 95
    2276 என் நெஞ்சம் மேயான் * என் சென்னியான் * தானவனை
    வல் நெஞ்சம் கீண்ட மணி வண்ணன் ** முன்னம் சேய்
    ஊழியான் * ஊழி பெயர்த்தான் * உலகு ஏத்தும்
    ஆழியான் அத்தியூரான் 95
  • IT 96
    2277 ## அத்தியூரான் புள்ளை ஊர்வான் * அணி மணியின்
    துத்தி சேர் * நாகத்தின்மேல் துயில்வான் ** முத்தீ
    மறை ஆவான் * மா கடல் நஞ்சு உண்டான் தனக்கும் *
    இறை ஆவான் எங்கள் பிரான் 96
  • IT 97
    2278 எங்கள் பெருமான் * இமையோர் தலைமகன்! நீ *
    செங்கண் நெடு மால் திருமார்பா! ** பொங்கு
    பட மூக்கின் ஆயிர வாய்ப் * பாம்பு அணைமேல் சேர்ந்தாய் *
    குடமூக்கில் கோயிலாக் கொண்டு 97
  • IT 98
    2279 கொண்டு வளர்க்கக் * குழவியாய்த் தான் வளர்ந்தது *
    உண்டது உலகு ஏழும் உள் ஒடுங்க ** கொண்டு
    குடம் ஆடிக் * கோவலனாய் மேவி * என் நெஞ்சம்
    இடமாகக் கொண்ட இறை 98
  • IT 99
    2280 ## இறை எம் பெருமான் ! அருள் என்று * இமையோர்
    முறை நின்று * மொய்ம் மலர்கள் தூவ ** அறை கழல
    சேவடியான் * செங்கண் நெடியான் * குறள் உருவாய்
    மாவடிவின் மண் கொண்டான் மால் 99
  • IT 100
    2281 ## மாலே நெடியோனே! கண்ணனே ! * விண்ணவர்க்கு
    மேலா! * வியன் துழாய்க் கண்ணியனே ! ** மேலால்
    விளவின் காய் * கன்றினால் வீழ்த்தவனே! * என் தன்
    அளவு அன்றால் யானுடைய அன்பு 100