Chozha Nādu·Temple 1 of 108

Srirangam

ஸ்ரீரங்கம்

Thiruvarangam, Koyil

ஸ்ரீ ரங்கநாயகீ ஸமேத ஸ்ரீ ரங்கநாதாய நமஹ
Image 1
1
Presiding Deities
MoolavarSri Ranganāthan
ThāyārSri Ranga Nāchiyār
UtsavarNamperumāl
Sayana (Reclining)Faces South Directions
VimānamPranavākruthi
PushkaraniChandra Puskarani, Cauveri, Kollidam, Vedhasrungam
ThirukolamSayana (Reclining)
DirectionSouth
Location
MandalamChozha Nādu
AreaTrichy
StateTamilNadu
Tradition
ĀgamamPāncharāthram
SampradāyamThenkalai
Festivals & Timings
Timings6:15 a.m. to 7:15 a.m. 9:00 a.m. to 12:30 p.m. 2:45 p.m. to 5:30 p.m. 7:00 p.m. to 9:00 p.m.
Recitation
Translation

PMT 1.1

647 இருளிரியச்சுடர்மணிகளிமைக்கும்நெற்றி

இனத்துத்தியணிபணமாயிரங்களார்ந்த *

அரவரசப்பெருஞ்சோதியனந்தனென்னும்

அணிவிளங்குமுயர்வெள்ளையணையைமேவி *

திருவரங்கப்பெருநகருள்தெண்ணீர்ப்பொன்னி

திரைக்கையாலடிவருடப்பள்ளிகொள்ளும் *

கருமணியைக்கோமளத்தைக்கண்டுகொண்டுஎன்

கண்ணிணைகளென்றுகொலோகளிக்கும்நாளே? (2)

PMT 1.6

652 அளிமலர்மேலயனரனிந்திரனோடுஏனை

அமரர்கள்தம்குழுவுமரம்பையரும்மற்றும் *

தெளிமதிசேர்முனிவர்கள்தம்குழுவுமுந்தித்

திசைதிசையில்மலர்தூவிச்சென்றுசேரும் *

களிமலர்சேர்பொழிலரங்கத்துரகமேறிக்

கண்வளரும்கடல்வண்ணர்கமலக்கண்ணும் *

ஒளிமதிசேர்திருமுகமும்கண்டு கொண்டு என்

உள்ளமிகஎன்றுகொலோவுருகும்நாளே?

PMT 1.7

653 மறந்திகழுமனமொழித்துவஞ்சமாற்றி

ஐம்புலன்களடக்கியிடர்ப்பாரத்துன்பம்

துறந்து * இருமுப்பொழுதேத்தியெல்லையில்லாத்

தொன்னெறிக்கண்நிலைநின்றதொண்டரான *

அறம்திகழும்மனத்தவர்தம்கதியைப்பொன்னி

அணியரங்கத்தரவணையில்பள்ளிகொள்ளும் *

நிறம்திகழும்மாயோனைக் கண்டு என்கண்கள்

நீர்மல்கஎன்றுகொலோநிற்கும்நாளே?

PMT 1.11

657 திடர்விளங்குகரைப்பொன்னிநடுவுபாட்டுத்

திருவரங்கதரவணையில்பள்ளிகொள்ளும் *

கடல்விளங்குகருமேனியம்மான்றன்னைக்

கண்ணாரக்கண்டுகக்கும்காதல்தன்னால் *

குடைவிளங்குவிறல்தானைக்கொற்றவொள்வாள்

கூடலர்கோன்கொடைகுலசேகரன்சொற்செய்த *

நடைவிளங்குதமிழ்மாலைபத்தும்வல்லார்

நலந்திகழ்நாரணனடிக்கீழ்நண்ணுவாரே (2)

TNT 2.11

2062 பட்டுடுக்கும் அயர்த்திரங்கும்பாவைபேணாள்

பனிநெடுங்கண்ணீர்ததும்பப்பள்ளிகொள்ளாள் *

எள்துணைப்போது என்குடங்காலிருக்ககில்லாள்

எம்பெருமான்திருவரங்கம்எங்கே? என்னும் *

மட்டுவிக்கிமணிவண்டுமுரலும்கூந்தல்

மடமானைஇதுசெய்தார் தம்மை * மெய்யே

கட்டுவிச்சிசொல்லென்னச்சொன்னாள் நங்காய்!

கடல்வண்ணர்இதுசெய்தார்காப்பாராரே?

TNT 2.12

2063 நெஞ்சுருகிக்கண்பனிப்பநிற்கும்சோரும்

நெடிதுயிர்க்கும்உண்டறியாள்உறக்கம்பேணாள் *

நஞ்சரவில்துயிலமர்ந்தநம்பீ! என்றும்

வம்பார்பூம்வயலாலிமைந்தா! என்றும் *

அஞ்சிறையபுட்கொடியேஆடும்பாடும்

அணியரங்கமாடுதுமோ? தோழீ! என்றும் *

எஞ்சிறகின்கீழடங்காப்பெண்ணைப்பெற்றேன்

இருநிலத்துஓர்பழிபடைத்தேன் ஏ! பாவமே.

TNT 3.25

2076 மின்னிலங்குதிருவுருவும்பெரியதோளும்

கரிமுனிந்தகைத்தலமும்கண்ணும்வாயும் *

தன்னலர்ந்தநறுந்துழாய்மலரின்கீழே

தாழ்ந்திலங்கும்மகரம்சேர்குழையும் காட்டி *

என்னலனும்என்நிறைவும்என்சிந்தையும்

என்வளையும்கொண்டு என்னையாளும்கொண்டு *

பொன்னலர்ந்தநறுஞ்செருந்திப்பொழிலினூடே

புனலரங்கமூரென்றுபோயினாரே.