He Who Taught the Tirumantiram to the Toṇḍai King
தொண்டை மன்னனுக்குத் திருமந்தரம் உபதேசித்தவன்
1426 துளங்குநீண்முடியரசர்தங்குரிசில்
தொண்டைமன்னவன்திண்திறலொருவற்கு
உளங்கொளன்பினோடுஇன்னருள்சுரந்து
அங்கோடுநாழிகையேழுடனிருப்ப *
வளங்கொள்மந்திரம்மற்றவற்குஅருளிச்
செய்தவாறு அடியேனறிந்து * உலக
மளந்தபொன்னடியேயடைந்துய்ந்தேன்
அணிபொழில்திருவரங்கத்தம்மானே! (2)