O Kaṇṇa! My Daughter's Fate is Unknown!
கண்ணா! என் மகளின் முடிவு தெரியவில்லையே!
3472 என்திருமகள்சேர்மார்வனே! என்னு
மென்னுடையாவியே! என்னும் *
நின்திருவெயிற்றாலிடந்துநீகொண்ட
நிலமகள்கேள்வனே! என்னும் *
அன்றுருவேழும்தழுவிநீகொண்ட
ஆய்மகளன்பனே! என்னும் *
தென்திருவரங்கம்கோயில்கொண்டானே!
தெளிகிலேன்முடிவிவள்தனக்கே. (2)