Araṅgan is He Who Graced Arjuna
அருச்சுனனுக்கு அருளியவன் அரங்கன்
1415 ஊழியாய்ஓமத்துச்சியாய் ஒருகா
லுடையதேரொருவனாய் * உலகில்
சூழிமால்யானைத்துயர்கெடுத்து
இலங்கைமலங்கஅன்றுஅடுசரந்துரந்து *
பாழியால்மிக்கபார்த்தனுக்கருளிப்
பகலவனொளிகெட * பகலே
ஆழியால்அன்றங்குஆழியைமறைத்தான்
அரங்கமாநகரமர்ந்தானே.