I Saw the One Who Swallowed the Seven Worlds in Araṅgam
உலகேழும் உண்டவனை அரங்கத்தில் கண்டேன்
1399 பேரானைக் குறுங்குடியெம்பெருமானை * திருதண்கா
லூரானைக் கரம்பனூருத்தமனை * முத்திலங்கு
காரார்திண்கடலேழும் மலையேழிவ்வுலகேழுண்டும் *
ஆராதென்றிருந்தானைக் கண்டதுதென்னரங்கத்தே. (2)