The Lord of Tiruvaraṅgam is He Who Grants Life to All Souls
உயிர்களுக்கு வாழ்வு அளிப்பவன் திருவரங்கன்
1409 இந்திரன்பிரமன்ஈசனென்றிவர்கள்
எண்ணில்பல்குணங்களே இயற்ற *
தந்தையும்தாயும்மக்களும் மிக்க
சுற்றமும்சுற்றிநின்றகலாப்
பந்தமும் * பந்தமறுப்பதோர்மருந்தும்
பான்மையும் பல்லுயிர்க்கெல்லாம் *
அந்தமும்வாழ்வுமாய எம்பெருமான்
அரங்கமாநகரமர்ந்தானே.