The Place of the Creator of Brahmā is Tiruvaraṅgam
பிரமனைப் படைத்தவனது இடம் திருவரங்கம்
1378 உந்திமேல்நான்முகனைப்படைத்தான் உலகுண்டவன்
எந்தைபெம்மான் * இமையோர்கள்தாதைக்கு இடமென்பரால் *
சந்தினோடுமணியும்கொழிக்கும் புனல்காவிரி *
அந்திபோலும்நிறத்தார்வயல்சூழ் தென்னரங்கமே. (2)