Tiruvaraṅgam, the Place Where Birds Recount the Glories of Garuḍa
பறவைகள் கருடனின் புகழ் கூறும் இடம் திருவரங்கம்
416 ஆமையாய்க்கங்கையாய் ஆழ்கடலா
யவனியாய்அருவரைகளாய் *
நான்முகனாய்நான்மறையாய் வேள்வியாய்த்
தக்கணையாய்த்தானுமானான் *
சேமமுடைநாரதனார் சென்றுசென்று
துதித்திறைஞ்சக்கிடந்தான்கோயில் *
பூமருவிப்புள்ளினங்கள் புள்ளரையன்
புகழ்குழறும்புனலரங்கமே.