He Who Protected Mārkaṇḍeya
மார்க்கண்டேயனைக் காப்பாற்றியவன்
1423 மன்னுநான்மறைமாமுனிபெற்ற
மைந்தனை மதியாதவெங்கூற்றந்
தன்னையஞ்சி * நின்சரணெனச்சரணாய்த்
தகவில்காலனையுகமுனிந்தொழியா *
பின்னைஎன்றும்நின்திருவடிபிரியாவண்ணம்
எண்ணியபேரருள் * எனக்கும்
அன்னதாகுமென்றுஅடியிணையடைந்தேன்
அணிபொழில்திருவரங்கத்தம்மானே!