PT 5.7.1

The Lord of Tiruvaraṅgam is He Who is Everything

எல்லாமாய் இருப்பவன் திருவரங்கன்

1408 பண்டைநான்மறையும்வேள்வியும்கேள்விப்

பதங்களும்பதங்களின்பொருளும் *

பிண்டமாய்விரித்தபிறங்கொளியனலும்

பெருகியபுனலொடுநிலனும் *

கொண்டல்மாருதமும்குரைகடலேழும்

ஏழுமாமலைகளும்விசும்பும் *

அண்டமும்தானாய்நின்றஎம்பெருமான்

அரங்கமாநகரமர்ந்தானே. (2)

Text size