Chozha Nādu·Temple 14 of 108

Thiru naraiyoor

திருநறையூர்

Nāchiyār Koil

ஸ்ரீ நம்பிக்கை நாச்சியார் ஸ்ரீவஞ்சுளவல்லி ஸமேத ஸ்ரீ நம்பிஸ்வாமிநே நமஹ
Image 1
14
Presiding Deities
MoolavarThiru Naraiyoor Nambi
ThāyārSri Vanjula Valli
UtsavarVāsudevan
Nindra (Standing)Faces East Directions
VimānamSrinvāsa, Hema
PushkaraniMani Mukthā, Sangarshana, Brathumna, etc.
ThirukolamNindra (Standing)
DirectionEast
Location
MandalamChozha Nādu
AreaKumbakkonam
StateTamilNadu
Tradition
SampradāyamThenkalai
Festivals & Timings
Timings7:30 a.m. to 12:30 p.m. 4:30 p.m. to 9:00 p.m.
Recitation
Translation

PT 6.6.2

1499 கொழுங்கயலாய்நெடுவெள்ளங்கொண்டகாலம்

குலவரையின்மீதோடி அண்டத்தப்பால் *

எழுந்துஇனிதுவிளையாடும்ஈசன்எந்தை

இணையடிக்கீழ்இனிதிருப்பீர்! இனவண்டாலும் *

உழும்செறுவில்மணிகொணர்ந்துகரைமேல்சிந்தி

உலகெல்லாம்சந்தனமும்அகிலும்கொள்ள *

செழும்பொன்னிவளங்கொடுக்கும்சோழன்சேர்ந்த

திருநறையூர்மணிமாடம்சேர்மின்களே.

PT 6.6.5

1502 அன்றுலகமூன்றினையும்அளந்து வேறோர்

அரியுருவாய்இரணியனதாகம்கீண்டு *

வென்றவனைவிண்ணுலகில்செலவுய்த்தாற்கு

விருந்தாவீர்! மேலெழுந்து விலங்கல்பாய்ந்து *

பொன்சிதறிமணிகொணர்ந்துகரைமேல்சிந்திப்

புலம்பரந்துநிலம்பரக்கும்பொன்னிநாடன் *

தென்தமிழன்வடபுலக்கோன்சோழன்சேர்ந்த

திருநறையூர்மணிமாடம்சேர்மின்களே.

PT 6.6.7

1504 முலைத்தடத்தநஞ்சுண்டுதுஞ்சப்பேய்ச்சி

முதுதுவரைக்குலபதியாக்காலிப்பின்னே *

இலைத்தடத்தகுழலூதி ஆயர்மாதர்

இனவளைகொண்டானடிக்கீழ்எய்தகிற்பீர்! *

மலைத்தடத்தமணிகொணர்ந்துவையம்உய்ய

வளங்கொடுக்கும்வருபுனலம்பொன்னிநாடன் *

சிலைத்தடக்கைக்குலச்சோழன்சேர்ந்தகோயில்

திருநறையூர்மணிமாடம்சேர்மின்களே.

PT 6.6.8

1505 முருக்கிலங்குகனித்துவர்வாய்ப்பின்னைகேள்வன்

மன்னெல்லாம்முன்னவியச்சென்று * வென்றிச்

செருக்களத்துத்திறலழியச்செற்றவேந்தன்

சிரந்துணிந்தான்திருவடிநும்சென்னிவைப்பீர்! *

இருக்கிலங்குதிருமொழிவாயெண்தோளீசற்கு

எழில்மாடம்எழுபதுசெய்துஉலகமாண்ட *

திருக்குலத்துவளச்சோழன்சேர்ந்தகோயில்

திருநறையூர்மணிமாடம்சேர்மின்களே.

PT 6.6.10

1507 செம்மொழிவாய்நால்வேதவாணர்வாழும்

திருநறையூர்மணிமாடச்செங்கண்மாலை *

பொய்ம்மொழியொன்றில்லாதமெய்ம்மையாளன்

புலமங்கைக்குலவேந்தன், புலமையார்ந்த *

அம்மொழிவாய்க்கலிகன்றிஇன்பப்பாடல்

பாடுவார், வியனுலகில்நமனார்பாடி *

வெம்மொழிகேட்டுஅஞ்சாதேமெய்ம்மைசொல்லில்

விண்ணவர்க்குவிருந்தாகும்பெருந்தக்கோரே. (2)

TNT 2.16

2067 கன்றுமேய்த்துஇனிதுகந்தகாளாய்! என்றும் *

கடிபொழில்சூழ்கணபுரத்துஎன்கனியே! என்றும் *

மன்றமரக்கூத்தாடிமகிழ்ந்தாய்! என்றும் *

வடதிருவேங்கடம்மேயமைந்தா! என்றும் *

வென்றசுரர்குலங்களைந்தவேந்தே! என்றும் *

விரிபொழில்சூழ்திருநறையூர்நின்றாய்! என்றும் *

துன்றுகுழல்கருநிறத்தென்துணையே! என்றும்

துணைமுலைமேல்துளிசோரச்சோர்கின்றாளே. (2)

TNT 2.17

2068 பொங்கார்மெல்லிளங்கொங்கைபொன்னேபூப்பப்

பொருகயல்கண்ணீரரும்பப்போந்துநின்று *

செங்காலமடப்புறவம்பெடைக்குப்பேசும்

சிறுகுரலுக்குஉடலுருகிச்சிந்தித்து * ஆங்கே

தண்காலும்தண்குடந்தைநகரும்பாடித்

தண்கோவலூர்பாடியாடக்கேட்டு *

நங்காய்! நங்குடிக்குஇதுவோநன்மை? என்ன

நறையூரும்பாடுவாள்நவில்கின்றாளே.