The Name of the Protector of Cows is "Namo Nārāyaṇa"
ஆநிறை காத்தவன் பெயர் நமோநாராயணம்
1545 கடுங்கால்மாரிகல்லேபொழிய அல்லேஎமக்கென்று
படுங்கால் * நீயேசரணென்று ஆயரஞ்ச, அஞ்சாமுன் *
நெடுங்காற்குன்றம்குடையொன்றேந்தி நிரையைச் சிரமத்தால் *
நடுங்காவண்ணம்காத்தான்நாமம் நமோநாராயணமே.