I Will Sing Only of the Reclining Lord
பள்ளிகொண்டானையே நான் பாடுவேன்
1573 எட்டனைப்பொழுதாகிலும் என்றும்
என்மனத்தகலாதிருக்கும்புகழ் *
தட்டலர்த்தபொன்னேயலர்கோங்கின்
தாழ்பொழில்திருமாலிருஞ்சோலையங்
கட்டியை * கரும்பீன்றஇன்சாற்றைக்
காதலால்மறைநான்குமுன்னோதிய
பட்டனை * பரவைத்துயிலேற்றை என்
பண்பனையன்றிப்பாடல்செய்யேனே.