The Perfect Lord of Naṟaiyūr is Paraśurāma Himself
நறையூர் நம்பிதான் பரசுராமன்
1509 முனியாய்வந்துமூவெழுகால் முடிசேர்மன்னருடல்துணிய *
தனிவாய்மழுவின்படையாண்டதாரார்தோளான், வார்புறவில் *
பனிசேர்முல்லைபல்லரும்பப் பானல்ஒருபால்கண்காட்ட *
நனிசேர்கமலம்முகங்காட்டும் நறையூர்நின்றநம்பியே.