2062 பட்டு உடுக்கும் அயர்த்து இரங்கும் பாவை பேணாள் * 
 பனி நெடுங் கண் நீர் ததும்பப் பள்ளி கொள்ளாள் * 
 எள் துணைப் போது என் குடங்கால் இருக்ககில்லாள் * 
 எம் பெருமான் திருவரங்கம் எங்கே? என்னும் ** 
 மட்டு விக்கி மணி வண்டு முரலும் கூந்தல் * 
 மட மானை இது செய்தார் தம்மை * மெய்யே 
 கட்டுவிச்சி சொல் என்னச் சொன்னாள் நங்காய்! *  
 கடல் வண்ணர் இது செய்தார் காப்பார் ஆரே? 11
2062 paṭṭu uṭukkum ayarttu iraṅkum pāvai peṇāl̤ * 
 paṉi nĕṭuṅ kaṇ nīr tatumpap pal̤l̤i kŏl̤l̤āl̤ * 
 ĕl̤ tuṇaip potu ĕṉ kuṭaṅkāl irukkakillāl̤ * 
 ĕm pĕrumāṉ tiruvaraṅkam ĕṅke? ĕṉṉum ** 
 maṭṭu vikki maṇi vaṇṭu muralum kūntal * 
 maṭa māṉai itu cĕytār-tammai * mĕyye 
 kaṭṭuvicci cŏl ĕṉṉac cŏṉṉāl̤ naṅkāy! * -
 kaṭal vaṇṇar itu cĕytār kāppār āre?-11