2062 பட்டு உடுக்கும் அயர்த்து இரங்கும் பாவை பேணாள் *
பனி நெடுங் கண் நீர் ததும்பப் பள்ளி கொள்ளாள் *
எள் துணைப் போது என் குடங்கால் இருக்ககில்லாள் *
எம் பெருமான் திருவரங்கம் எங்கே? என்னும் **
மட்டு விக்கி மணி வண்டு முரலும் கூந்தல் *
மட மானை இது செய்தார் தம்மை * மெய்யே
கட்டுவிச்சி சொல் என்னச் சொன்னாள் நங்காய்! *
கடல் வண்ணர் இது செய்தார் காப்பார் ஆரே? 11
2062 paṭṭu uṭukkum ayarttu iraṅkum pāvai peṇāl̤ *
paṉi nĕṭuṅ kaṇ nīr tatumpap pal̤l̤i kŏl̤l̤āl̤ *
ĕl̤ tuṇaip potu ĕṉ kuṭaṅkāl irukkakillāl̤ *
ĕm pĕrumāṉ tiruvaraṅkam ĕṅke? ĕṉṉum **
maṭṭu vikki maṇi vaṇṭu muralum kūntal *
maṭa māṉai itu cĕytār-tammai * mĕyye
kaṭṭuvicci cŏl ĕṉṉac cŏṉṉāl̤ naṅkāy! * -
kaṭal vaṇṇar itu cĕytār kāppār āre?-11