Chapter 2

A worrying mother! - (பட்டு உடுக்கும்)

ஒரு வருத்தப்படும் தாய்
Verses: 2062 to 2071
Grammar: Eṇcīrk Kaḻinediladi Āsiriya Viruththam / எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
  • TNT 2.11
    2062 பட்டு உடுக்கும் அயர்த்து இரங்கும் பாவை பேணாள் *
    பனி நெடுங் கண் நீர் ததும்பப் பள்ளி கொள்ளாள் *
    எள் துணைப் போது என் குடங்கால் இருக்ககில்லாள் *
    எம் பெருமான் திருவரங்கம் எங்கே? என்னும் **
    மட்டு விக்கி மணி வண்டு முரலும் கூந்தல் *
    மட மானை இது செய்தார் தம்மை * மெய்யே
    கட்டுவிச்சி சொல் என்னச் சொன்னாள் நங்காய்! *
    கடல் வண்ணர் இது செய்தார் காப்பார் ஆரே? 11
  • TNT 2.12
    2063 நெஞ்சு உருகிக் கண் பனிப்ப நிற்கும் சோரும் *
    நெடிது உயிர்க்கும் உண்டு அறியாள் உறக்கம் பேணாள் *
    நஞ்சு அரவில் துயில் அமர்ந்த நம்பீ! என்னும் *
    வம்பு ஆர் பூ வயல் ஆலி மைந்தா! என்னும் **
    அம் சிறைய புட்கொடியே ஆடும் பாடும் *
    அணி அரங்கம் ஆடுதுமோ? தோழீ! என்னும் *
    என் சிறகின்கீழ் அடங்காப் பெண்ணைப் பெற்றேன் *
    இரு நிலத்து ஓர் பழி படைத்தேன் ஏ பாவமே 12
  • TNT 2.13
    2064 கல் எடுத்துக் கல் மாரி காத்தாய்! என்றும் *
    காமரு பூங் கச்சி ஊரகத்தாய்! என்றும் *
    வில் இறுத்து மெல்லியல் தோள் தோய்ந்தாய்! என்றும் *
    வெஃகாவில் துயில் அமர்ந்த வேந்தே! என்றும் **
    மல் அடர்த்து மல்லரை அன்று அட்டாய்! என்றும் *
    மா கீண்ட கைத்தலத்து என் மைந்தா! என்றும் *
    சொல் எடுத்துத் தன் கிளியைச் சொல்லே என்று *
    துணை முலைமேல் துளி சோர சோர்கின்றாளே 13
  • TNT 2.14
    2065 ## முளைக் கதிரைக் குறுங்குடியுள் முகிலை * மூவா
    மூவுலகும் கடந்து அப்பால் முதலாய் நின்ற *
    அளப்பு அரிய ஆர் அமுதை அரங்கம் மேய
    அந்தணனை * அந்தணர் தம் சிந்தையானை **
    விளக்கு ஒளியை மரதகத்தைத் திருத்தண்காவில் *
    வெஃகாவில் திருமாலைப் பாடக் கேட்டு *
    வளர்த்ததனால் பயன்பெற்றேன் வருக என்று *
    மடக் கிளியைக் கைகூப்பி வணங்கினாளே 14
  • TNT 2.15
    2066 ## கல் உயர்ந்த நெடு மதிள் சூழ் கச்சி மேய
    களிறு என்றும் * கடல் கிடந்த கனியே! என்றும் *
    அல்லியம் பூ மலர்ப் பொய்கைப் பழன வேலி *
    அணி அழுந்தூர் நின்று உகந்த அம்மான்! என்றும் *
    சொல் உயர்ந்த நெடு வீணை முலை மேல் தாங்கித் *
    தூ முறுவல் நகை இறையே தோன்ற நக்கு *
    மெல் விரல்கள் சிவப்பு எய்தத் தடவி ஆங்கே *
    மென் கிளிபோல் மிக மிழற்றும் என் பேதையே 15
  • TNT 2.16
    2067 ## கன்று மேய்த்து இனிது உகந்த காளாய்! என்றும் *
    கடி பொழில் சூழ் கணபுரத்து என் கனியே! என்றும் *
    மன்று அமரக் கூத்து ஆடி மகிழ்ந்தாய்! என்றும் *
    வட திருவேங்கடம் மேய மைந்தா! என்றும் **
    வென்று அசுரர் குலம் களைந்த வேந்தே! என்றும்
    விரி பொழில் சூழ் திருநறையூர் நின்றாய்! என்றும் *
    துன்று குழல் கரு நிறத்து என் துணையே! என்றும் *
    துணை முலைமேல் துளி சோரச் சோர்கின்றாளே! 16
  • TNT 2.17
    2068 பொங்கு ஆர் மெல் இளங் கொங்கை பொன்னே பூப்பப் *
    பொரு கயல் கண் நீர் அரும்பப் போந்து நின்று *
    செங் கால மடப் புறவம் பெடைக்குப் பேசும் *
    சிறு குரலுக்கு உடல் உருகிச் சிந்தித்து ** ஆங்கே
    தண்காலும் தண் குடந்தை நகரும் பாடித் *
    தண் கோவலூர் பாடி ஆடக் கேட்டு *
    நங்காய்! நம் குடிக்கு இதுவோ நன்மை? என்ன *
    நறையூரும் பாடுவாள் நவில்கின்றாளே 17
  • TNT 2.18
    2069 கார் வண்ணம் திருமேனி கண்ணும் வாயும் *
    கைத்தலமும் அடி இணையும் கமல வண்ணம் *
    பார் வண்ண மட மங்கை பத்தர் * பித்தர்
    பனி மலர்மேல் பாவைக்கு பாவம் செய்தேன் **
    ஏர் வண்ண என் பேதை என் சொல் கேளாள் *
    எம் பெருமான் திருவரங்கம் எங்கே? என்னும் *
    நீர்வண்ணன் நீர்மலைக்கே போவேன் என்னும் *
    இது அன்றோ நிறை அழிந்தார் நிற்குமாறே 18
  • TNT 2.19
    2070 முற்று ஆரா வன முலையாள் பாவை * மாயன்
    மொய் அகலத்துள் இருப்பாள் அஃதும் கண்டும்
    அற்றாள் * தன் நிறை அழிந்தாள் ஆவிக்கின்றாள் *
    அணி அரங்கம் ஆடுதுமோ? தோழீ! என்னும் **
    பெற்றேன் வாய்ச் சொல் இறையும் பேசக் கேளாள் *
    பேர் பாடித் தண் குடந்தை நகரும் பாடி *
    பொற்றாமரைக் கயம் நீராடப் போனாள் *
    பொரு அற்றாள் என் மகள் உம் பொன்னும் அஃதே 19
  • TNT 2.20
    2071 தேர் ஆளும் வாள் அரக்கன் செல்வம் மாளத் *
    தென் இலங்கை முன் மலங்கச் செந்தீ ஒல்கி *
    போர் ஆளன் ஆயிரந் தோள் வாணன் மாளப் *
    பொரு கடலை அரண் கடந்து புக்கு மிக்க
    பார் ஆளன் ** பார் இடந்து பாரை உண்டு
    பார் உமிழ்ந்து பார் அளந்து * பாரை ஆண்ட
    பேர் ஆளன் * பேர் ஓதும் பெண்ணை மண்மேல் *
    பெருந்தவத்தள் என்று அல்லால் பேசல் ஆமே? 20