TNT 3.21 2072 ## மை வண்ண நறுங் குஞ்சிக் குழல் பின் தாழ * மகரம் சேர் குழை இருபாடு இலங்கி ஆட * எய் வண்ண வெம் சிலையே துணையா * இங்கே இருவராய் வந்தார் என் முன்னே நின்றார் ** கை வண்ணம் தாமரை வாய் கமலம் போலும் * கண் இணையும் அரவிந்தம் அடியும் அஃதே * அவ் வண்ணத்து அவர் நிலைமை கண்டும் தோழீ ! * அவரை நாம் தேவர் என்று அஞ்சினோமே! 21
TNT 3.22 2073 நைவளம் ஒன்று ஆராயா நம்மை நோக்கா * நாணினார் போல் இறையே நயங்கள் பின்னும் * செய்வு அளவில் என் மனமும் கண்ணும் ஓடி * எம் பெருமான் திருவடிக்கீழ் அணைய ** இப்பால் கைவளையும் மேகலையும் காணேன் * கண்டேன் கன மகரக் குழை இரண்டும் நான்கு தோளும் * எவ்வளவு உண்டு எம் பெருமான் கோயில்? என்றேற்கு * இது அன்றோ எழில் ஆலி என்றார் தாமே 22
TNT 3.23 2074 உள் ஊரும் சிந்தை நோய் எனக்கே தந்து * என் ஒளி வளையும் மா நிறமும் கொண்டார் இங்கே * தெள் ஊரும் இளந் தெங்கின் தேறல் மாந்திச் * சேல் உகளும் திருவரங்கம் நம் ஊர் என்ன ** கள் ஊரும் பைந் துழாய் மாலையானைக் * கனவிடத்தில் யான் காண்பன் கண்ட போது * புள் ஊரும் கள்வா! நீ போகேல் என்பன் * என்றாலும் இது நமக்கு ஓர் புலவி தானே 23
TNT 3.24 2075 இரு கையில் சங்கு இவை நில்லா எல்லே பாவம்! * இலங்கு ஒலி நீர்ப் பெரும் பௌவம் மண்டி உண்ட * பெரு வயிற்ற கரு முகிலே ஒப்பர் வண்ணம் * பெருந் தவத்தர் அருந் தவத்து முனிவர் சூழ ** ஒரு கையில் சங்கு ஒரு கை மற்று ஆழி ஏந்தி * உலகு உண்ட பெரு வாயர் இங்கே வந்து * என் பொரு கயல் கண் நீர் அரும்பப் புலவி தந்து * புனல் அரங்கம் ஊர் என்று போயினாரே 24
TNT 3.25 2076 மின் இலங்கு திருவுருவும் பெரிய தோளும் * கரி முனிந்த கைத்தலமும் கண்ணும் வாயும் * தன் அலர்ந்த நறுந் துழாய் மலரின் கீழே * தாழ்ந்து இலங்கு மகரம் சேர் குழையும் காட்டி ** என் நலனும் என் நிறையும் என் சிந்தையும் * என் வளையும் கொண்டு என்னை ஆளும் கொண்டு * பொன் அலர்ந்த நறுஞ் செருந்திப் பொழிலினூடே * புனல் அரங்கம் ஊர் என்று போயினாரே 25
TNT 3.26 2077 தே மருவு பொழிலிடத்து மலர்ந்த போதைத் * தேன் அதனை வாய்மடுத்து உன் பெடையும் நீயும் * பூ மருவி இனிது அமர்ந்து பொறியில் ஆர்ந்த * அறு கால சிறு வண்டே! தொழுதேன் உன்னை ** ஆ மருவி நிரை மேய்த்த அமரர் கோமான் * அணி அழுந்தூர் நின்றானுக்கு இன்றே சென்று * நீ மருவி அஞ்சாதே நின்று ஓர் மாது * நின் நயந்தாள் என்று இறையே இயம்பிக் காணே 26
TNT 3.27 2078 ## செங் கால மட நாராய் இன்றே சென்று * திருக்கண்ணபுரம் புக்கு என் செங் கண் மாலுக்கு * என் காதல் என் துணைவர்க்கு உரைத்தியாகில் * இது ஒப்பது எமக்கு இன்பம் இல்லை ** நாளும் பைங் கானம் ஈது எல்லாம் உனதே ஆகப் * பழன மீன் கவர்ந்து உண்ணத் தருவன் * தந்தால் இங்கே வந்து இனிது இருந்து உன் பெடையும் நீயும் * இரு நிலத்தில் இனிது இன்பம் எய்தலாமே 27
TNT 3.28 2079 தென் இலங்கை அரண் சிதறி அவுணன் மாளச் * சென்று உலகம் மூன்றினையும் திரிந்து ஓர் தேரால் * மன் இலங்கு பாரதத்தை மாள ஊர்ந்த * வரை உருவின் மா களிற்றை தோழீ! * என் தன் பொன் இலங்கு முலைக் குவட்டில் பூட்டிக்கொண்டு * போகாமை வல்லேனாய்ப் புலவி எய்தி * என்னில் அங்கம் எல்லாம் வந்து இன்பம் எய்த * எப்பொழுதும் நினைந்து உருகி இருப்பன் நானே 28
TNT 3.29 2080 ## அன்று ஆயர் குலமகளுக்கு அரையன் தன்னை * அலை கடலைக் கடைந்து அடைத்த அம்மான் தன்னை * குன்றாத வலி அரக்கர் கோனை மாளக் * கொடும் சிலைவாய்ச் சரம் துரந்து குலம் களைந்து வென்றானை ** குன்று எடுத்த தோளினானை * விரி திரை நீர் விண்ணகரம் மருவி நாளும் நின்றானை * தண் குடந்தைக் கிடந்த மாலை * நெடியானை அடி நாயேன் நினைந்திட்டேனே 29
TNT 3.30 2081 ## மின்னு மா மழை தவழும் மேக வண்ணா! * விண்ணவர் தம் பெருமானே! அருளாய் என்று * அன்னம் ஆய் முனிவரோடு அமரர் ஏத்த * அருமறையை வெளிப்படுத்த அம்மான் தன்னை ** மன்னு மா மணி மாட மங்கை வேந்தன் * மான வேல் பரகாலன் கலியன் சொன்ன * பன்னிய நூல் தமிழ் மாலை வல்லார் * தொல்லைப் பழவினையை முதல் அரிய வல்லார் தாமே 30