Chapter 1

First Prakaraṇam

Bāshyam
Translation

verse 16

சதுர்விதமான தேஹவர்ணாச்ரமாதிகார பல மோக்ஷ ஸாதந கதி யுக தர்ம வ்யூஹ ரூப க்ரியாதிகளை அறிவிக்கிற பாட்டுப் பரப்புக்குப் பெரிய தீவினில் ஒன்பதாம் கூறும் மானிடப் பிறவியும் ஆக்கைநிலையும் ஈரிரண்டி லொன்றும் இளமையுமிசைவு முண்டாய் புகுவரேலு மென்கிறதுக்குள்ளே விக்நமற நின்றவாநில்லாப் ப்ரமாதியைக் கொண்டு அறக்கற்கை அரிதென்றிறே வேதஸாரோபநிஷத் ஸாரதராநுவாக ஸாரதம காயத்ரியில் முதலோதுகிற பொருள் முடிவான சுருக்கைத் தெய்வவண்டாய் அன்னமாய் அமுதம் கொண்டவன் சாகைகளிலும் ஓதம்போல் கிளர் நால்வேதக் கடலிலும் தேனும் பாலு மமுதுமாக வெடுத்துப் பெரு விசும்பருளும் பேரருளாலே சிங்காமை விரித்தது.

verse 49

உறக்கந்தலைக் கொண்ட பின்னை மறை நான்குமுணர்ந்த தங்களப்பனோடே யோதின சந்தச்சதுமுகன் சலங்கலந்த வெண்புரிநூல் மானுரி திரிதந்துண்ணும் காமனுடலிருக்கிலங்கு ஜ்யேஷ்ட புத்ராதிகளுக்கு மறை பயந்தாப்போலே ஆதுமில் காலத்தெந்தையான வாய்முதலப்பன் பிரமகுருவாய் இராப்பகல் முன்சொல்லக் கற்றனமே யென்றவிவரும் நாவினால் நன்மையாலென்று ஓதவல்ல பிராக்களைக் கன்மின்க ளென்று சொல் பயிற்ற, வேதம் ஓதுவாரோத்தாகையாலே ஆதர்வணாதிகள்போலே இதுவும் பேர்பெற்றது.

verse 52

சந்தோகனென்று ஸாமாந்யமாகாமல் முதலிலே பிரித்து யாழ் பயில் காநஸ்வரூபியைப் பாலையாகியென்று விசேஷிக்கையாலே வேதகீதச்சாமி நானென்ற ஸாமந்தோன்ற உத்கீத ப்ரணவத்தை ப்ரதமத்திலே மாறாடி சரமகதி முடிவாகத் தொண்டர்க்கமுதென்ன தேவாந்நமாக்கி மஹாகோஷ நல்வேத வொலிபோலே மஹாத்யயந மென்னப் பாடுகையாலே இத்தை சாந்தோக்ய ஸமமென்பர்கள்.

verse 53

புரவியேழொருகாலுடைய தேரிலே திருச்சக்கர மொத்துக் கால சக்கரச்செங்கோல் நடாவி ஜ்யோதிச்சக்ர வொளிசுருக்கி அக்நீஷோமீய தேஜோம்ருதத்துக்கு ஊற்றும் மந்தேஹர்க்குச் செந்தீயும் முக்தி மார்க்கத்தலைவாசலும் கண்ணாவான் கண்ணில் பிறந்த கண்மணியும் த்ரயீமயமுமான மண்டலத்திலே தண்டாமரை சுமக்கத் தோள்வளையும் குழையும் திருச்செய்ய முடியு மாரமும் படையும் திகழும் பொன்மேனியும் செஞ்சுடர்த் தாமரைக் கண்ணுமாய் அணிநிறமூர்த்தி யீதென்னும்படி இரண்டையும் தன்னிறமாக்குகிற செய்யாளான வித்யையோடே அருக்கன் மேவின ஸதாத்யேய தேஜஸ்ஸின் ஸாம ரஸோத்காந நாம முள்ளுறையான ஆத்யந்தங்களாலே ஓராயிரமாமவற்றிலே ஒன்றை ஆயிரமுகத்தினாலருளின தீர்த்தம்போலே தீர்த்தங்களாயிரமுமாக விஸ்தரிக்கிறாரென்று வேதகுரூபதேசம்.

verse 57

கருவுள் வேறலாமை அரனயனெச் செய்யுவை போலே மூவுருவா முதல்வன் துப்பரவாலே பரமகவிகளால் பாடுவியாது நேர்படச் சொல்லும் நீர்மையிலாவென்னைத் தன்னாக்கி யென் நா முதல் வந்து புகுந்து தப்புதலறத் தன்னை வைகுந்தனாகத் தன் சொல்லால் தானே துதித்து மலக்கு நாவியல் மொய்ய சொல்லால் சொல்லவல்லே னென்று நானுஞ் சொல்லி நாடுங் கையெடுக்கும்படி என் சொல்லால் யான் சொன்ன இன்கவியென் பித்தா னென்றாரிறே.

verse 64

குருசிஷ்ய க்ரந்தவிரோதங்களைப் பரமதாதிகளாலே பரிஹரியாமல் செஞ்சொல் செந்தமிழின் கவி பரவி யழைக்குமென்று அந்யோந்யம் கொண்டாடிப் பேசிற்றே பேசுமேக கண்டரில் என்னில் மிகுமென்னு மிவ ருரைகொளின் மொழி கொண்டு சாஸ்த்ரார்த்தங்கள் நிர்ணயிக்க வேண்டுகையாலே வலங்கொண்ட விதுக்குச் சேராதவை மநு விபரீதங்கள் போலே.

verse 85

ம்லேச்சனும் பக்தனானால் சதுர்வேதிகள் அநுவர்த்திக்க அறிவு கொடுத்துக் குலதைவத்தோடொக்கப் பூஜை கொண்டு பாவநதீர்த்த ப்ரஸாதனாமென்கிற திருமுகப்படியும், விச்வாமித்ர விஷ்ணுசித்த துளஸீ ப்ருத்யரோடே உள்கலந்து தொழு குலமானவன் நிலையார் பாடலாலே ப்ராஹ்மண வேள்விக் குறை முடித்தமையும், கீழ்மகன் தலைமகனுக்கு ஸமஸகாவாய்த் தம்பிக்கு முன் பிறந்து வேலும் வில்லும் கொண்டு பின் பிறந்தாரைச் சோதித்துத் தமையனுக்கு இளையோன் ஸத்பாவம்

சொல்லும்படி ஏககுலமானமையும், தூது மொழிந்து நடந்து வந்தவர்களுடைய ஸம்யக் ஸகுண ஸஹபோஜனமும், ஒரு பிறவியிலே இரு பிறவியானார் இருவர்க்கு தர்மஸூநு ஸ்வாமிகள் அக்ரபூஜை கொடுத்தமையும், ஐவரில் நால்வரில் மூவரில் முற்பட்டவர்கள் ஸந்தேஹியாமல் ஸஹஜரோடே புரோடாசமாகச் செய்த புத்ர க்ருத்யமும்,

புஷ்ப தியாக போக மண்டபங்களில் பணிபூவும் ஆலவட்டமும் வீணையும் கையுமான அந்தரங்கரை முடிமன்னவனும் வைதிகோத்தமரும் மஹாமுனியும் அனுவர்த்தித்த க்ரமமும் யாகானுயாகோத்தர வீதிகளில் காயாந்ந ஸ்தல ஷுத்தி பண்ணின வருத்தாசாரமும் அறிவார்க்கிறே ஜந்மோத்கர்ஷாபகர்ஷம் தெரிவது.

Srimathe Ramanujaya Namah! www.uveda.org | All rights reserved. | Privacy policy | Credits | Help | Contact Us
UVEDAORG — a registered 501(c)(3) nonprofit organization · EIN 41-5031752 · Portland, Oregon, USA · About
Uveda.org logo