ராமாயணம் நாராயண கதையென்று தொடங்கி கங்காகாங்கேய ஸம்பவாத்ய ஸத் கீர்த்தநம் பண்ணின எச்சில்வாய் சுத்தி பண்ணாமல் திருமாலவன் கவியென்ற வாயோலைப்படியே மாற்றங்க ளாய்ந்து கொண்டு உரிய சொல்வாய்த்த விது வேதாதிகளில் பௌருஷ மாநவ கீதா வைஷ்ணவங்கள்போலே அருளிச்செயலில் ஸாரம்.