சதுர்விதமான தேஹவர்ணாச்ரமாதிகார பல மோக்ஷ ஸாதந கதி யுக தர்ம வ்யூஹ ரூப க்ரியாதிகளை அறிவிக்கிற பாட்டுப் பரப்புக்குப் பெரிய தீவினில் ஒன்பதாம் கூறும் மானிடப் பிறவியும் ஆக்கைநிலையும் ஈரிரண்டி லொன்றும் இளமையுமிசைவு முண்டாய் புகுவரேலு மென்கிறதுக்குள்ளே விக்நமற நின்றவாநில்லாப் ப்ரமாதியைக் கொண்டு அறக்கற்கை அரிதென்றிறே வேதஸாரோபநிஷத் ஸாரதராநுவாக ஸாரதம காயத்ரியில் முதலோதுகிற பொருள் முடிவான சுருக்கைத் தெய்வவண்டாய் அன்னமாய் அமுதம் கொண்டவன் சாகைகளிலும் ஓதம்போல் கிளர் நால்வேதக் கடலிலும் தேனும் பாலு மமுதுமாக வெடுத்துப் பெரு விசும்பருளும் பேரருளாலே சிங்காமை விரித்தது.