கருவுள் வேறலாமை அரனயனெச் செய்யுவை போலே மூவுருவா முதல்வன் துப்பரவாலே பரமகவிகளால் பாடுவியாது நேர்படச் சொல்லும் நீர்மையிலாவென்னைத் தன்னாக்கி யென் நா முதல் வந்து புகுந்து தப்புதலறத் தன்னை வைகுந்தனாகத் தன் சொல்லால் தானே துதித்து மலக்கு நாவியல் மொய்ய சொல்லால் சொல்லவல்லே னென்று நானுஞ் சொல்லி நாடுங் கையெடுக்கும்படி என் சொல்லால் யான் சொன்ன இன்கவியென் பித்தா னென்றாரிறே.