Bāshkara Kshethram

2672 ஒருபேருந்தியிருமலர்த்தவிசில் *
ஒருமுறையயனையீன்றனை * ஒருமுறை
இருசுடர்மீதினிலியங்கா * மும்மதி
ளிலங்கையிருகால்வளைய * ஒருசிலை
யொன்றியஈரெயிற்றழல்வாய்வாளியி *
னட்டனை * மூவடிநானிலம்வேண்டி *
முப்புரிநூலொடுமானுரியிலங்கு
மார்வினின் * இருபிறப்பொருமாணாகி *
ஒருமுறையீரடிமூவுலகளந்தனை *
நால்திசைநடுங்கஅஞ்சிறைப்பறவை
யேறி * நால்வாய்மும்மதத்திருசெவி
யொருதனிவேழத்தரந்தையை * ஒருநாள்
இருநீர்மடுவுள் தீர்த்தனை * முத்தீ
நான்மறைஐவகைவேள்வி * அறுதொழி
லந்தணர்வணங்குந்தன்மையை * ஐம்புலன்
அகத்தினுள்செறுத்து * நான்குடனடக்கி
முக்குணத்திரண்டவையகற்றி * ஒன்றினில்
ஒன்றிநின்று * ஆங்கிருபிறப்பறுப்போர்
அறியும்தன்மையை * முக்கண்நால்தோள்
ஐவாயரவோடு * ஆறுபொதிசடையோன்
அறிவருந்தன்மைப்பெருமையுள்நின்றனை *
ஏழுலகெயிற்றினில்கொண்டனை * கூறிய
அறுசுவைப்பயனுமாயினை * சுடர்விடும்
ஐம்படையங்கையுளமர்ந்தனை * சுந்தர
நால்தோள்முந்நீர்வண்ண! * நின்னீரடி
ஒன்றியமனத்தால் * ஒருமதிமுகத்து
மங்கையரிருவரும் மலரன * அங்கையின்
முப்பொழுதும்வருடஅறிதுயிலமர்ந்தனை *
நெறிமுறைநால்வகைவருணமுமாயினை *
மேதகும்ஐம்பெரும்பூதமும்நீயே *
அறுபதம்முரலுங்கூந்தல்காரணம் *
ஏழ்விடையடங்கச்செற்றனை * அறுவகைச்
சமயமும்அறிவருநிலையினை * ஐம்பா
லோதியையாகத்திருத்தினை * அறம்முதல்
நான்கவையாய்மூர்த்திமூன்றாய் *
இருவகைப்பயனாய் ஒன்றாய்விரிந்து
நின்றனை * குன்றாமதுமலர்ச்சோலை
வண்கொடிப்படப்பை * வருபுனற்பொன்னி
மாமணியலைக்கும் * செந்நெலொண்கழனித்
திகழ்வனமுடுத்த * கற்போர்புரிசைக்
கனகமாளிகை * நிமிர்கொடிவிசும்பில்
இளம்பிறைதுவக்கும் * செல்வம்மல்குதென்
திருக்குடந்தை * அந்தணர்மந்திரமொழியுடன்
வணங்க * ஆடரவமளியிலறிதுயில்
அமர்ந்தபரம! * நின்னடியிணைபணிவன்
வருமிடரகலமாற்றோவினையே. (2)