Kaṇṇiṇuṇchiṛuthāmbu
கண்ணிநுண்சிறுத்தாம்பு
The author of this Prabandham, Madhurakavi āzhvār, is like the dawn that appears before the sunrise, which is Nammazhvar. During the time when Lord Krishna, who incarnated for the sake of devotees, was present in this world, Madhurakavi āzhvār did not follow Krishna but instead embraced the divine feet of Nammazhvar, who explained the deeper meanings
+ Read moreஇந்தப் பிரபந்தத்தின் கர்த்தாவாகிய மதுரகவி ஆழ்வார் நம்மாழ்வார் என்னும் சூரியன் உதயமாவதற்கு முன் தோன்றிய அருணோதயம் ஆவார். பக்தர்களுக்காகவே அவதாரம் செய்த ஸ்ரீ கிருஷ்ணன், பூவுலகில் விபவத்தில் எழுந்தருளியிருந்த காலத்தில், அவரை விட்டுவிட்டு, எளிதில் பொருள் அறிய முடியாத வேதத்தின் உட்பொருளை
+ Read moreGroup: 1st 1000
Verses: 937 to 947
Glorification: Namm Āzhvār (நம்மாழ்வார்)
- தனியன் / Taniyan
- KCT 1
937 ## கண்ணி நுண் சிறுத் தாம்பினால் * கட்டு உண்ணப்
பண்ணிய பெரு மாயன் * என் அப்பனில் **
நண்ணித் தென் குருகூர் * நம்பி என்றக்கால் *
அண்ணிக்கும் அமுது ஊறும் * என் நாவுக்கே (1) - KCT 2
938 நாவினால் நவிற்று * இன்பம் எய்தினேன் *
மேவினேன் * அவன் பொன்னடி மெய்ம்மையே **
தேவு மற்று அறியேன் * குருகூர் நம்பி *
பாவின் இன்னிசை * பாடித் திரிவனே (2) - KCT 3
939 திரிதந்து ஆகிலும் * தேவபிரான் உடை *
கரிய கோலத் * திருவுருக் காண்பன் நான் **
பெரிய வண் குருகூர் * நகர் நம்பிக்கு ஆள்
உரியனாய் * அடியேன் பெற்ற நன்மையே (3) - KCT 4
940 நன்மையால் மிக்க * நான்மறையாளர்கள் *
புன்மை ஆகக் * கருதுவர் ஆதலில் **
அன்னையாய் அத்தனாய் * என்னை ஆண்டிடும்
தன்மையான் * சடகோபன் என் நம்பியே (4) - KCT 5
941 நம்பினேன் * பிறர் நன்பொருள் தன்னையும் *
நம்பினேன் * மடவாரையும் முன் எலாம் **
செம்பொன் மாடத் * திருக் குருகூர் நம்பிக்கு
அன்பனாய் * அடியேன் சதிர்த்தேன் இன்றே (5) - KCT 6
942 இன்று தொட்டும் * எழுமையும் எம்பிரான் *
நின்று தன் புகழ் * ஏத்த அருளினான் **
குன்ற மாடத் * திருக் குருகூர் நம்பி *
என்றும் என்னை * இகழ்வு இலன் காண்மினே (6) - KCT 7
943 கண்டு கொண்டு என்னைக் * காரிமாறப் பிரான் *
பண்டை வல் வினை * பாற்றி அருளினான் **
எண் திசையும் * அறிய இயம்புகேன் *
ஒண் தமிழ்ச் * சடகோபன் அருளையே (7) - KCT 8
944 அருள் கொண்டாடும் * அடியவர் இன்புற *
அருளினான் * அவ் அரு மறையின் பொருள் **
அருள்கொண்டு * ஆயிரம் இன் தமிழ் பாடினான் *
அருள் கண்டீர் * இவ் உலகினில் மிக்கதே (8) - KCT 9
945 மிக்க வேதியர் * வேதத்தின் உட்பொருள் *
நிற்கப் பாடி * என் நெஞ்சுள் நிறுத்தினான் **
தக்க சீர்ச் * சடகோபன் என் நம்பிக்கு * ஆட்
புக்க காதல் * அடிமைப் பயன் அன்றே (9) - KCT 10
946 ## பயன் அன்று ஆகிலும் * பாங்கு அலர் ஆகிலும் *
செயல் நன்றாகத் * திருத்திப் பணி கொள்வான் **
குயில் நின்று ஆர் பொழில் சூழ் * குருகூர் நம்பி *
முயல்கின்றேன் * உன்தன் மொய் கழற்கு அன்பையே (10) - KCT 11
947 ## அன்பன் தன்னை * அடைந்தவர்கட்கு எல்லாம்
அன்பன் * தென் குருகூர் நகர் நம்பிக்கு **
அன்பனாய் * மதுரகவி சொன்ன சொல்
நம்புவார் பதி * வைகுந்தம் காண்மினே (11)