Chapter 4

Young girls draw a circle to see whether their love will be successful - (தெள்ளியார்)

கூடல் இழைத்தல்
Young girls draw a circle to see whether their love will be successful - (தெள்ளியார்)

"It is customary for those with anxious thoughts to seek omens to know if their desires will be fulfilled. One such method involves drawing a circle and placing several spirals within it. If, upon counting, the spirals are even, the desire will be fulfilled. If they are odd, it will not. This is one form of seeking an omen. A cowherd girl did this,

+ Read more

மனக்கவலை கொண்டவர் தம் எண்ணம் நிறைவேறுமா என்று அறிவதற்குக் குறி பார்ப்பது வழக்கம். வட்டமாகக் கோடிட்டு அதனுள் பல சுழிகளைப் போடுவது. பிறகு அவற்றை எண்ணிப் பார்க்கும்போது இரட்டையாக இருந்தால் எண்ணம் நிறைவேறும். ஒற்றையாக இருந்தால் நிறைவேறாது. இவ்வாறு பார்ப்பதும் ஒரு குறி. ஓர் ஆயர்மகள் இவ்வாறு

+ Read more
Verses: 534 to 544
Grammar: Aṟuchīrk Kaḻinediladi Āsiriya Viruththam / அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
Recital benefits: Will not get affected by the results of bad karma
  • NAT 4.1
    534 ## தெள்ளியார் * பலர் கைதொழும் தேவனார் *
    வள்ளல் * மாலிருஞ்சோலை மணாளனார் **
    பள்ளி கொள்ளும் இடத்து * அடி கொட்டிட *
    கொள்ளுமாகில் * நீ கூடிடு கூடலே (1)
  • NAT 4.2
    535 ## காட்டில் வேங்கடம் * கண்ணபுர நகர் *
    வாட்டம் இன்றி * மகிழ்ந்து உறை வாமனன் **
    ஓட்டரா வந்து * என் கைப் பற்றி தன்னொடும் *
    கூட்டு மாகில் * நீ கூடிடு கூடலே (2)
  • NAT 4.3
    536 பூ மகன் புகழ் வானவர் * போற்றுதற்கு
    ஆமகன் அணி வாணுதல் * தேவகி
    மா மகன் ** மிகு சீர் வசுதேவர்தம் *
    கோமகன் வரில் * கூடிடு கூடலே (3)
  • NAT 4.4
    537 ஆய்ச்சிமார்களும் * ஆயரும் அஞ்சிட *
    பூத்த நீள் * கடம்பு ஏறிப் புகப் பாய்ந்து **
    வாய்த்த காளியன்மேல் * நடம் ஆடிய *
    கூத்தனார் வரில் * கூடிடு கூடலே (4)
  • NAT 4.5
    538 மாட மாளிகை சூழ் * மதுரைப் பதி
    நாடி * நம் தெருவின் நடுவே வந்திட்டு **
    ஓடை மா * மத யானை உதைத்தவன் *
    கூடுமாகில் * நீ கூடிடு கூடலே (5)
  • NAT 4.6
    539 அற்றவன் * மருதம் முறிய நடை
    கற்றவன் * கஞ்சனை * வஞ்சனையிற்
    செற்றவன் ** திகழும் மதுரைப் பதி *
    கொற்றவன் வரில் * கூடிடு கூடலே (6)
  • NAT 4.7
    540 அன்று இன்னாதன செய் * சிசுபாலனும் *
    நின்ற நீள் * மருதும் எருதும் புள்ளும் **
    வென்றி வேல் * விறல் கஞ்சனும் வீழ * முன்
    கொன்றவன் வரில் * கூடிடு கூடலே (7)
  • NAT 4.8
    541 ஆவல் அன்பு உடையார் தம் * மனத்து அன்றி
    மேவலன் * விரை சூழ் * துவராபதிக்
    காவலன் ** கன்று மேய்த்து விளையாடும் *
    கோவலன் வரில் * கூடிடு கூடலே (8)
  • NAT 4.9
    542 கொண்ட கோலக் * குறள் உருவாய்ச் சென்று *
    பண்டு மாவலிதன் * பெரு வேள்வியில் **
    அண்டமும் நிலனும் * அடி ஒன்றினால் *
    கொண்டவன் வரில் * கூடிடு கூடலே (9)
  • NAT 4.10
    543 பழகு நான்மறையின் பொருளாய் * மதம்
    ஒழுகு வாரணம் * உய்ய அளித்த ** எம்
    அழகனார் * அணி ஆய்ச்சியர் சிந்தையுள் *
    குழகனார் வரில் * கூடிடு கூடலே (10)
  • NAT 4.11
    544 ## ஊடல் கூடல் * உணர்தல் புணர்தலை *
    நீடு நின்ற * நிறை புகழ் ஆய்ச்சியர் **
    கூடலைக் * குழல் கோதை முன் கூறிய *
    பாடல் பத்தும் வல்லார்க்கு * இல்லை பாவமே (11)