Chapter 6

Āṇḍāl's dream of the wedding - (வாரணம் ஆயிரம்)

திருமணக் கனவை உரைத்தல்
Āṇḍāl's dream of the wedding - (வாரணம் ஆயிரம்)
Andal dreamt of marrying Krishna; she shares her dream with her friend. "Friend! The city is adorned with festoons; pots filled with sacred water are placed everywhere. A wedding pavilion is set up with strings of pearls hanging. It is the auspicious time. I am sitting with Krishna. He is performing the marriage rites with me. Holding my hand, he takes + Read more
கண்ணனை மணம் செய்து கொள்வதுபோல் ஆண்டாள் கணவு கண்டாள்; தோழி! நகரத்தில் தோரணங்கள் கட்டப்பட்டுள்ளன; பூரண கும்பங்கள் வைக்கப்பட்டுள்ளன. திருமணப்பந்தலிட்டு முத்துச் சரங்கள் தொங்கவிடப்பட்டுள்ளன. முகூர்த்த வேளை. கண்ணனோடு அமர்ந்திருக்கிறேன். கண்ணன் என்னைப் பாணிக்கிரகணம் செய்துகொள்கிறான். கையைப் + Read more
Verses: 556 to 566
Grammar: Kaliviruththam / கலிவிருத்தம்
Recital benefits: Will get good children and live happily
  • NAT 6.1
    556 ## வாரணம் ஆயிரம் * சூழ வலஞ்செய்து *
    நாரணன் நம்பி * நடக்கின்றான் என்று எதிர் **
    பூரண பொற்குடம் * வைத்துப் புறம் எங்கும் *
    தோரணம் நாட்டக் * கனாக் கண்டேன் தோழீ ! நான் (1)
  • NAT 6.2
    557 நாளை வதுவை * மணம் என்று நாள் இட்டு *
    பாளைக் கமுகு * பரிசு உடைப் பந்தல் கீழ் **
    கோளரி மாதவன் * கோவிந்தன் என்பான் ஓர் *
    காளை புகுதக் * கனாக் கண்டேன் தோழீ ! நான் (2)
  • NAT 6.3
    558 இந்திரன் உள்ளிட்ட * தேவர் குழாம் எல்லாம் *
    வந்திருந்து என்னை * மகட் பேசி மந்திரித்து **
    மந்திரக் கோடி உடுத்தி * மண மாலை *
    அந்தரி சூட்டக் * கனாக் கண்டேன் தோழீ! நான் (3)
  • NAT 6.4
    559 நால் திசைத் தீர்த்தம் கொணர்ந்து * நனி நல்கி *
    பார்ப்பனச் சிட்டர்கள் * பல்லார் எடுத்து ஏத்தி **
    பூப் புனை கண்ணிப் * புனிதனோடு என்தன்னை *
    காப்பு நாண் கட்டக் * கனாக் கண்டேன் தோழீ நான் (4)
  • NAT 6.5
    560 கதிர் ஒளி தீபம் * கலசம் உடன் ஏந்தி *
    சதிர் இள மங்கையர் * தாம் வந்து எதிர்கொள்ள **
    மதுரையார் மன்னன் * அடிநிலை தொட்டு எங்கும் *
    அதிரப் புகுதக் * கனாக் கண்டேன் தோழீ நான் (5)
  • NAT 6.6
    561 மத்தளம் கொட்ட * வரி சங்கம் நின்று ஊத *
    முத்து உடைத் தாமம் * நிரை தாழ்ந்த பந்தற் கீழ் **
    மைத்துனன் நம்பி * மதுசூதன் வந்து என்னைக் *
    கைத்தலம் பற்றக் * கனாக் கண்டேன் தோழீ நான் (6)
  • NAT 6.7
    562 வாய் நல்லார் * நல்ல மறை ஓதி மந்திரத்தால் *
    பாசிலை நாணல் படுத்துப் * பரிதி வைத்து **
    காய் சின மா களிறு அன்னான் * என் கைப்பற்றி *
    தீ வலஞ் செய்யக் * கனாக் கண்டேன் தோழீ நான் (7)
  • NAT 6.8
    563 இம்மைக்கும் * ஏழ் ஏழ் பிறவிக்கும் பற்று ஆவான் *
    நம்மை உடையவன் * நாராயணன் நம்பி **
    செம்மை உடைய * திருக்கையால் தாள் பற்றி *
    அம்மி மிதிக்கக் * கனாக் கண்டேன் தோழீ நான் (8)
  • NAT 6.9
    564 வரிசிலை வாள் முகத்து * என்னைமார் தாம் வந்திட்டு *
    எரிமுகம் பாரித்து * என்னை முன்னே நிறுத்தி **
    அரிமுகன் அச்சுதன் * கைம்மேல் என் கை வைத்து *
    பொரிமுகந்து அட்டக் * கனாக் கண்டேன் தோழீ நான் (9)
  • NAT 6.10
    565 குங்குமம் அப்பிக் * குளிர் சாந்தம் மட்டித்து *
    மங்கல வீதி * வலஞ் செய்து மண நீர் **
    அங்கு அவனோடும் * உடன் சென்று அங்கு ஆனைமேல் *
    மஞ்சனம் ஆட்டக் * கனாக் கண்டேன் தோழீ நான் (10)
  • NAT 6.11
    566 ## ஆயனுக்காகத் * தான் கண்ட கனாவினை *
    வேயர் புகழ் * வில்லிபுத்தூர்க்கோன் கோதை சொல் **
    தூய தமிழ்மாலை * ஈரைந்தும் வல்லவர் *
    வாயும் நன் மக்களைப் பெற்று * மகிழ்வரே (11)