Chapter 10

Result of love sickness - (கார்க்கோடற் பூக்காள்)

காதல்-நோய் செய்த பரிசு
Result of love sickness - (கார்க்கோடற் பூக்காள்)
"O Kanthal flowers! Where is Krishna, who has a blue hue like yours? O vine bearing fruits like Krishna’s ruby lips! Everyone calls him Sathyavadi (truthful), but has he changed in my matter? O Mullai vine that reminds me of Krishna’s smile! Do not appear before me and cause me sorrow! O cuckoos! What is this noise? Can you not sing so that Lord Venkatesa + Read more
காந்தள் மலர்களே! உங்களைப் போன்ற நீலவண்ணன் கண்ணன் எங்கே? கண்ணனின் பவள வாயைப் போன்ற பழங்களைக் கொண்ட கொடியே! அவனை சத்யவாதி என்று எல்லோரும் கூறுகின்றனர். என் விஷயத்தில் மாறிவிட்டானோ? கண்ணனின் புன்முறுவலை நினைவூட்டும் முல்லைக் கொடியே! என் எதிரில் தோன்றி என்னை வருத்தாதே! குயில்களே! ஈதென்ன + Read more
Verses: 597 to 606
Grammar: Kalinilaiththuṟai / கலிநிலைத்துறை
Recital benefits: Will be able to see the Lord
  • NAT 10.1
    597 ## கார்க்கோடல் பூக்காள் * கார்க்கடல் வண்ணன் என்மேல் * உம்மைப்
    போர்க் கோலம் செய்து * போர விடுத்தவன் எங்கு உற்றான்? **
    ஆர்க்கோ இனி நாம் * பூசல் இடுவது? * அணி துழாய்த்
    தார்க்கு ஓடும் நெஞ்சந் தன்னைப் * படைக்க வல்லேன் அந்தோ (1)
  • NAT 10.2
    598 மேல் தோன்றிப் பூக்காள் * மேல் உலகங்களின் மீது போய் *
    மேல் தோன்றும் சோதி * வேத முதல்வர் வலங்கையில் **
    மேல் தோன்றும் ஆழியின் * வெஞ்சுடர் போலச் சுடாது * எம்மை
    மாற்றோலைப் பட்டவர் கூட்டத்து * வைத்துக்கொள்கிற்றிரே? (2)
  • NAT 10.3
    599 கோவை மணாட்டி * நீ உன் கொழுங்கனி கொண்டு * எம்மை
    ஆவி தொலைவியேல் * வாயழகர் தம்மை அஞ்சுதும் **
    பாவியேன் தோன்றிப் * பாம்பு அணையார்க்கும் தம் பாம்புபோல் *
    நாவும் இரண்டு உள ஆய்த்து * நாணிலியேனுக்கே (3)
  • NAT 10.4
    600 முல்லைப் பிராட்டி * நீ உன் முறுவல்கள் கொண்டு * எம்மை
    அல்லல் விளைவியேல் * ஆழி நங்காய் உன் அடைக்கலம் **
    கொல்லை அரக்கியை மூக்கு அரிந்திட்ட * குமரனார்
    சொல்லும் பொய்யானால் * நானும் பிறந்தமை பொய் அன்றே? (4)
  • NAT 10.5
    601 பாடும் குயில்காள் * ஈது என்ன பாடல்? * நல் வேங்கட
    நாடர் நமக்கு ஒரு வாழ்வு தந்தால் * வந்து பாடுமின் **
    ஆடும் கருளக் கொடி உடையார் * வந்து அருள்செய்து *
    கூடுவார் ஆயிடில் * கூவி நும் பாட்டுக்கள் கேட்டுமே (5)
  • NAT 10.6
    602 கண மா மயில்காள் * கண்ணபிரான் திருக்கோலம் போன்று *
    அணி மா நடம் பயின்று ஆடுகின்றீர்க்கு * அடி வீழ்கின்றேன் **
    பணம் ஆடு அரவணைப் * பற்பல காலமும் பள்ளிகொள் *
    மணவாளர் நம்மை வைத்த * பரிசு இது காண்மினே (6)
  • NAT 10.7
    603 நடம் ஆடித் தோகை விரிக்கின்ற * மா மயில்காள் * உம்மை
    நடம் ஆட்டம் காணப் * பாவியேன் நான் ஓர் முதல் இலேன் **
    குடம் ஆடு கூத்தன் * கோவிந்தன் கோமிறை செய்து * எம்மை
    உடை மாடு கொண்டான் * உங்களுக்கு இனி ஒன்று போதுமே? (7)
  • NAT 10.8
    604 ## மழையே! மழையே! * மண் புறம் பூசி உள்ளாய் நின்று *
    மெழுகு ஊற்றினால் போல் * ஊற்று நல் வேங்கடத்து உள் நின்ற **
    அழகப்பிரானார் தம்மை * என் நெஞ்சத்து அகப்படத்
    தழுவ நின்று * என்னைத் ததைத்துக்கொண்டு * ஊற்றவும் வல்லையே? (8)
  • NAT 10.9
    605 கடலே! கடலே! உன்னைக் கடைந்து * கலக்கு உறுத்து *
    உடலுள் புகுந்துநின்று * ஊறல் அறுத்தவற்கு ** என்னையும்
    உடலுள் புகுந்துநின்று * ஊறல் அறுக்கின்ற மாயற்கு * என்
    நடலைகள் எல்லாம் * நாகணைக்கே சென்று உரைத்தியே? (9)
  • NAT 10.10
    606 ## நல்ல என் தோழி * நாகணைமிசை நம்பரர் *
    செல்வர் பெரியர் * சிறு மானிடவர் நாம் செய்வதென்? **
    வில்லி புதுவை * விட்டுசித்தர் தங்கள் தேவரை *
    வல்ல பரிசு வருவிப்பரேல் * அது காண்டுமே (10)