Chapter 11

The love of a girl for the lord of Srirangam - (தாம் உகக்கும்)

திருவரங்கத்துச் செல்வனைக் காமுறல்
The love of a girl for the lord of Srirangam - (தாம் உகக்கும்)
"Andal longs for the Lord, thinking of Him constantly. Her body becomes emaciated, and the bangles on her arms slip off. Yet, He does not come to her. Andal laments; Krishna, who is Ranganatha, lovingly holds the conch in His hand. But He has caused the conch bangles on my hand to fall off. He walked to Bali to grant him three paces of land! Can't He + Read more
ஆண்டாள் பகவானை நினைத்து ஏங்குகிறாள். உடல் இளைக்கிறது. கை வளைகள் கழன்று விழுகின்றன. அப்போதும் அவன் அவ்விடம் வரவில்லை. ஆண்டாள் வருந்துகிறாள்; கண்ணனாகிய அரங்கன் தன் கையில் ஆசைப்பட்டு சங்கை வைத்திருக்கிறான். ஆனால் என் கையிலுள்ள சங்கு வளைகளைக் கீழே விழுமாறு செய்தவிட்டான். மூவடிமண் பெற + Read more
Verses: 607 to 616
Grammar: **Taravu Kocchakakkalippā / தரவு கொச்சகக்கலிப்பா
  • NAT 11.1
    607 ## தாம் உகக்கும் தம் கையில் * சங்கமே போலாவோ *
    யாம் உகக்கும் எம் கையில் * சங்கமும்? ஏந்திழையீர் **
    தீ முகத்து நாகணைமேல் * சேரும் திருவரங்கர் *
    ஆ முகத்தை நோக்காரால் * அம்மனே அம்மனே (1)
  • NAT 11.2
    608 எழில் உடைய அம்மனைமீர் * என் அரங்கத்து இன்னமுதர் *
    குழல் அழகர் வாய் அழகர் * கண் அழகர் கொப்பூழில் **
    எழு கமலப் பூ அழகர் * எம்மானார் * என்னுடைய
    கழல் வளையைத் * தாமும் கழல் வளையே ஆக்கினரே (2)
  • NAT 11.3
    609 ## பொங்கு ஓதம் சூழ்ந்த * புவனியும் விண் உலகும் *
    அங்கு ஆதும் சோராமே * ஆள்கின்ற எம்பெருமான் **
    செங்கோல் உடைய * திருவரங்கச் செல்வனார் *
    எம் கோல் வளையால் * இடர் தீர்வர் ஆகாதே? (3)
  • NAT 11.4
    610 மச்சு அணி மாட * மதில் அரங்கர் வாமனனார் *
    பச்சைப் பசுந் தேவர் * தாம் பண்டு நீர் ஏற்ற **
    பிச்சைக் குறையாகி * என்னுடைய பெய்வளை மேல் *
    இச்சை உடையரேல் * இத் தெருவே போதாரே? (4)
  • NAT 11.5
    611 பொல்லாக் குறள் உருவாய்ப் * பொன் கையில் நீர் ஏற்று *
    எல்லா உலகும் * அளந்து கொண்ட எம்பெருமான் **
    நல்லார்கள் வாழும் * நளிர் அரங்க நாகணையான் *
    இல்லாதோம் கைப்பொருளும் * எய்துவான் ஒத்து உளனே (5)
  • NAT 11.6
    612 கைப் பொருள்கள் முன்னமே * கைக்கொண்டார் * காவிரி நீர்
    செய்ப் புரள ஓடும் * திருவரங்கச் செல்வனார் **
    எப் பொருட்கும் நின்று ஆர்க்கும் * எய்தாது * நான் மறையின்
    சொற்பொருளாய் நின்றார் * என் மெய்ப்பொருளும் கொண்டாரே (6)
  • NAT 11.7
    613 உண்ணாது உறங்காது * ஒலிகடலை ஊடறுத்து *
    பெண் ஆக்கை யாப்புண்டு * தாம் உற்ற பேது எல்லாம் **
    திண்ணார் மதிள் சூழ் * திருவரங்கச் செல்வனார் *
    எண்ணாதே தம்முடைய * நன்மைகளே எண்ணுவரே (7)
  • NAT 11.8
    614 ## பாசி தூர்த்தக் கிடந்த * பார் மகட்கு * பண்டு ஒரு நாள்
    மாசு உடம்பில் நீர் வாரா * மானம் இலாப் பன்றி ஆம் **
    தேசு உடைய தேவர் * திருவரங்கச் செல்வனார் *
    பேசி இருப்பனகள் * பேர்க்கவும் பேராவே (8)
  • NAT 11.9
    615 கண்ணாலம் கோடித்துக் * கன்னி தன்னைக் கைப்பிடிப்பான் *
    திண் ஆர்ந்து இருந்த * சிசுபாலன் தேசு அழிந்து **
    அண்ணாந்து இருக்கவே * ஆங்கு அவளைக் கைப்பிடித்த *
    பெண்ணாளன் பேணும் ஊர் * பேரும் அரங்கமே (9)
  • NAT 11.10
    616 ## செம்மை உடைய * திருவரங்கர் தாம் பணித்த *
    மெய்ம்மைப் பெரு வார்த்தை * விட்டுசித்தர் கேட்டிருப்பர் **
    தம்மை உகப்பாரைத் * தாம் உகப்பர் என்னும் சொல் *
    தம்மிடையே பொய்யானால் * சாதிப்பார் ஆர் இனியே? (10)