Chapter 4
Āzhvār meditating upon His all pervading nature - (புகழும் நல்)
ஆத்மாக்கள் அனைத்தும் அவனே
These divine hymns elaborate on Bhagavān’s presence within all things in this world (omnipresence).
பகவான் உலகிலுள்ள எல்லாப் பொருள்களாக இருக்கிறான் என்பதை இப்பகுதி கூறுகிறது.
மூன்றாம் பத்து -நான்காம் திருவாய்மொழி – புகழும்நல் ஒருவன்’-பிரவேசம்
கீழே – ‘ஒழிவில் காலமெல்லாம் உடனாய் மன்னி வழுவிலா அடிமை செய்ய வேண்டும் நாம்,’ என்று அடிமை செய்யப் பாரித்தார்; இவர் பாரித்த பாரிப்புக்கெல்லாம் + Read more
Verses: 3046 to 3056
Grammar: Aṟuchīrk Kaḻinediladi Āsiriya Viruththam / அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
Pan: நாட்டம்
Timing: 12-1.12 PM
Recital benefits: will enjoy the pleasures of moksha
- TVM 3.4.1
3046 ## புகழும் நல் ஒருவன் என்கோ? *
பொரு இல் சீர்ப் பூமி என்கோ? *
திகழும் தண் பரவை என்கோ? *
தீ என்கோ? வாயு என்கோ? **
நிகழும் ஆகாசம் என்கோ? *
நீள் சுடர் இரண்டும் என்கோ? *
இகழ்வு இல் இவ் அனைத்தும் என்கோ? *
கண்ணனைக் கூவும் ஆறே (1) - TVM 3.4.2
3047 கூவும் ஆறு அறியமாட்டேன் *
குன்றங்கள் அனைத்தும் * என்கோ? *
மேவு சீர் மாரி என்கோ? *
விளங்கு தாரகைகள் என்கோ? **
நா இயல் கலைகள் என்கோ? *
ஞான நல் ஆவி என்கோ? *
பாவு சீர்க் கண்ணன் எம்மான் *
பங்கயக் கண்ணனையே (2) - TVM 3.4.3
3048 பங்கயக் கண்ணன் என்கோ? *
பவளச் செவ்வாயன் என்கோ? *
அம் கதிர் அடியன் என்கோ? *
அஞ்சன வண்ணன் என்கோ? **
செங்கதிர் முடியன் என்கோ? *
திரு மறு மார்பன் என்கோ? *
சங்கு சக்கரத்தன் என்கோ? *
சாதி மாணிக்கத்தையே (3) - TVM 3.4.4
3049 சாதி மாணிக்கம் என்கோ? *
சவி கொள் பொன் முத்தம் என்கோ? *
சாதி நல் வயிரம் என்கோ? *
தவிவு இல் சீர் விளக்கம் என்கோ? **
ஆதி அம் சோதி என்கோ? *
ஆதி அம் புருடன் என்கோ? *
ஆதும் இல் காலத்து எந்தை *
அச்சுதன் அமலனையே (4) - TVM 3.4.5
3050 அச்சுதன் அமலன் என்கோ? *
அடியவர் வினை கெடுக்கும் *
நச்சும் மா மருந்தம் என்கோ? *
நலங் கடல் அமுதம் என்கோ? **
அச் சுவைக் கட்டி என்கோ? *
அறுசுவை அடிசில் என்கோ? *
நெய்ச் சுவைத் தேறல் என்கோ? *
கனி என்கோ? பால் என்கேனோ? (5) - TVM 3.4.6
3051 பால் என்கோ? *
நான்கு வேதப் பயன் என்கோ? *
சமய நீதி நூல் என்கோ? *
நுடங்கு கேள்வி இசை என்கோ? **
இவற்றுள் நல்ல மேல் என்கோ? *
வினையின் மிக்க பயன் என்கோ? *
கண்ணன் என்கோ?
மால் என்கோ? மாயன் என்கோ? *
வானவர் ஆதியையே (6) - TVM 3.4.7
3052 வானவர் ஆதி என்கோ? *
வானவர் தெய்வம் என்கோ? *
வானவர் போகம் என்கோ? *
வானவர் முற்றும் என்கோ? **
ஊனம் இல் செல்வம் என்கோ? *
ஊனம் இல் சுவர்க்கம் என்கோ? *
ஊனம் இல் மோக்கம் என்கோ? *
ஒளி மணி வண்ணனையே (7) - TVM 3.4.8
3053 ஒளி மணி வண்ணன் என்கோ? *
ஒருவன் என்று ஏத்த நின்ற *
நளிர் மதிச் சடையன் என்கோ? *
நான்முகக் கடவுள் என்கோ? **
அளி மகிழ்ந்து உலகம் எல்லாம் *
படைத்து அவை ஏத்த நின்ற *
களி மலர்த் துளவன் எம்மான் *
கண்ணனை மாயனையே (8) - TVM 3.4.9
3054 கண்ணனை மாயன் தன்னைக் *
கடல் கடைந்து அமுதம் கொண்ட *
அண்ணலை அச்சுதனை *
அனந்தனை அனந்தன் தன்மேல் **
நண்ணி நன்கு உறைகின்றானை *
ஞாலம் உண்டு உமிழ்ந்த மாலை *
எண்ணும் ஆறு அறியமாட்டேன் *
யாவையும் எவரும் தானே (9) - TVM 3.4.10
3055 யாவையும் எவரும் தானாய் *
அவரவர் சமயம் தோறும் *
தோய்வு இலன் புலன் ஐந்துக்கும் *
சொலப்படான் உணர்வின் மூர்த்தி **
ஆவி சேர் உயிரின் உள்ளால் *
ஆதும் ஓர் பற்று இலாத *
பாவனை அதனைக் கூடில் *
அவனையும் கூடலாமே (10) - TVM 3.4.11
3056 ## கூடி வண்டு அறையும் தண் தார்க் *
கொண்டல் போல் வண்ணன் தன்னை *
மாடு அலர் பொழில் * குருகூர்
வண் சடகோபன் சொன்ன **
பாடல் ஓர் ஆயிரத்துள் *
இவையும் ஓர் பத்தும் வல்லார் *
வீடு இல போகம் எய்தி *
விரும்புவர் அமரர் மொய்த்தே (11)