Chapter 6

Thiruvazhundur 2 - (சிங்கம்-அது ஆய்)

திருவழுந்தூர் 2
Thiruvazhundur 2 - (சிங்கம்-அது ஆய்)
These verses are indeed sung in praise of Amaruviyappan, the Lord of Thiruvazhundur.
இப்பகுதிப் பாடல்களும் திருவழுந்தூர் ஆமருவியப்பன் விஷயமாகப் பாடப்பட்டனவே.
Verses: 1598 to 1607
Grammar: Kalinilaiththuṟai / கலிநிலைத்துறை
Recital benefits: Will rule the world of Gods
  • PT 7.6.1
    1598 ## சிங்கம் அது ஆய் அவுணன் * திறல் ஆகம் முன் கீண்டு உகந்த *
    சங்கம் இடத்தானைத் * தழல் ஆழி வலத்தானை **
    செங் கமலத்து அயன் அனையார் * தென் அழுந்தையில் மன்னி நின்ற *
    அம் கமலக் கண்ணனை * அடியேன் கண்டுகொண்டேனே 1
  • PT 7.6.2
    1599 கோ ஆனார் மடியக் * கொலை ஆர் மழுக் கொண்டருளும் *
    மூவா வானவனை * முழு நீர் வண்ணனை அடியார்க்கு **
    ஆஆ என்று இரங்கித் * தென் அழுந்தையில் மன்னி நின்ற *
    தேவாதிதேவனை * யான் கண்டுகொண்டு திளைத்தேனே 2
  • PT 7.6.3
    1600 உடையானை * ஒலி நீர் உலகங்கள் படைத்தானை *
    விடையான் ஓட அன்று * விறல் ஆழி விசைத்தானை *
    அடையார் தென் இலங்கை அழித்தானை * அணி அழுந்தூர்
    உடையானை * அடியேன் அடைந்து உய்ந்துபோனேனே 3
  • PT 7.6.4
    1601 குன்றால் மாரி தடுத்தவனை * குல வேழம் அன்று
    பொன்றாமை * அதனுக்கு அருள்செய்த போர் ஏற்றை **
    அன்று ஆவின் நறு நெய் * அமர்ந்து உண்ட அணி அழுந்தூர்
    நின்றானை * அடியேன் கண்டுகொண்டு நிறைந்தேனே 4
  • PT 7.6.5
    1602 கஞ்சனைக் காய்ந்தானைக் * கண்ணமங்கையுள் நின்றானை *
    வஞ்சனப் பேய் முலையூடு * உயிர் வாய் மடுத்து உண்டானை **
    செஞ்சொல் நான்மறையோர் * தென் அழுந்தையில் மன்னி நின்ற *
    அஞ்சனக் குன்றம் தன்னை * அடியேன் கண்டுகொண்டேனே 5
  • PT 7.6.6
    1603 பெரியானை * அமரர் தலைவற்கும் பிரமனுக்கும் *
    உரி யானை உகந்தான் அவனுக்கும் * உணர்வதனுக்கு
    அரியானை ** அழுந்தூர் மறையோர்கள் * அடிபணியும்
    கரியானை * அடியேன் கண்டுகொண்டு களித்தேனே 6
  • PT 7.6.7
    1604 திரு வாழ் மார்வன் தன்னைத் * திசை மண் நீர் எரி முதலா *
    உரு ஆய் நின்றவனை * ஒலி சேரும் மாருதத்தை **
    அரு ஆய் நின்றவனைத் * தென் அழுந்தையில் மன்னி நின்ற *
    கரு ஆர் கற்பகத்தைக் * கண்டுகொண்டு களித்தேனே 7
  • PT 7.6.8
    1605 நிலை ஆள் ஆக * என்னை உகந்தானை * நில மகள் தன்
    முலை ஆள் வித்தகனை * முது நான்மறை வீதிதொறும் **
    அலை ஆர் கடல்போல் முழங்கும் * தென் அழுந்தையில் மன்னிநின்ற *
    கலை ஆர் சொற்பொருளைக் * கண்டுகொண்டு களித்தேனே 8
  • PT 7.6.9
    1606 ## பேரானைக் * குடந்தைப் பெருமானை * இலங்கு ஒளி சேர்
    வார் ஆர் வனமுலையாள் * மலர் மங்கை நாயகனை **
    ஆரா இன் அமுதைத் * தென் அழுந்தையில் மன்னி நின்ற *
    கார் ஆர் கரு முகிலைக் * கண்டுகொண்டு களித்தேனே 9
  • PT 7.6.10
    1607 ## திறல் முருகன் அனையார் * தென் அழுந்தையில் மன்னி நின்ற *
    அற முதல்வன் அவனை * அணி ஆலியர் கோன் மருவார் **
    கறை நெடு வேல் வலவன் * கலிகன்றி சொல் ஐ இரண்டும் *
    முறை வழுவாமை வல்லார் * முழுது ஆள்வர் வான் உலகே 10