PT 7.6.1 1598 ## சிங்கம் அது ஆய் அவுணன் * திறல் ஆகம் முன் கீண்டு உகந்த * சங்கம் இடத்தானைத் * தழல் ஆழி வலத்தானை ** செங் கமலத்து அயன் அனையார் * தென் அழுந்தையில் மன்னி நின்ற * அம் கமலக் கண்ணனை * அடியேன் கண்டுகொண்டேனே 1
PT 7.6.2 1599 கோ ஆனார் மடியக் * கொலை ஆர் மழுக் கொண்டருளும் * மூவா வானவனை * முழு நீர் வண்ணனை அடியார்க்கு ** ஆஆ என்று இரங்கித் * தென் அழுந்தையில் மன்னி நின்ற * தேவாதிதேவனை * யான் கண்டுகொண்டு திளைத்தேனே 2
PT 7.6.3 1600 உடையானை * ஒலி நீர் உலகங்கள் படைத்தானை * விடையான் ஓட அன்று * விறல் ஆழி விசைத்தானை * அடையார் தென் இலங்கை அழித்தானை * அணி அழுந்தூர் உடையானை * அடியேன் அடைந்து உய்ந்துபோனேனே 3
PT 7.6.4 1601 குன்றால் மாரி தடுத்தவனை * குல வேழம் அன்று பொன்றாமை * அதனுக்கு அருள்செய்த போர் ஏற்றை ** அன்று ஆவின் நறு நெய் * அமர்ந்து உண்ட அணி அழுந்தூர் நின்றானை * அடியேன் கண்டுகொண்டு நிறைந்தேனே 4
PT 7.6.5 1602 கஞ்சனைக் காய்ந்தானைக் * கண்ணமங்கையுள் நின்றானை * வஞ்சனப் பேய் முலையூடு * உயிர் வாய் மடுத்து உண்டானை ** செஞ்சொல் நான்மறையோர் * தென் அழுந்தையில் மன்னி நின்ற * அஞ்சனக் குன்றம் தன்னை * அடியேன் கண்டுகொண்டேனே 5
PT 7.6.7 1604 திரு வாழ் மார்வன் தன்னைத் * திசை மண் நீர் எரி முதலா * உரு ஆய் நின்றவனை * ஒலி சேரும் மாருதத்தை ** அரு ஆய் நின்றவனைத் * தென் அழுந்தையில் மன்னி நின்ற * கரு ஆர் கற்பகத்தைக் * கண்டுகொண்டு களித்தேனே 7
PT 7.6.8 1605 நிலை ஆள் ஆக * என்னை உகந்தானை * நில மகள் தன் முலை ஆள் வித்தகனை * முது நான்மறை வீதிதொறும் ** அலை ஆர் கடல்போல் முழங்கும் * தென் அழுந்தையில் மன்னிநின்ற * கலை ஆர் சொற்பொருளைக் * கண்டுகொண்டு களித்தேனே 8
PT 7.6.9 1606 ## பேரானைக் * குடந்தைப் பெருமானை * இலங்கு ஒளி சேர் வார் ஆர் வனமுலையாள் * மலர் மங்கை நாயகனை ** ஆரா இன் அமுதைத் * தென் அழுந்தையில் மன்னி நின்ற * கார் ஆர் கரு முகிலைக் * கண்டுகொண்டு களித்தேனே 9
PT 7.6.10 1607 ## திறல் முருகன் அனையார் * தென் அழுந்தையில் மன்னி நின்ற * அற முதல்வன் அவனை * அணி ஆலியர் கோன் மருவார் ** கறை நெடு வேல் வலவன் * கலிகன்றி சொல் ஐ இரண்டும் * முறை வழுவாமை வல்லார் * முழுது ஆள்வர் வான் உலகே 10