Chapter 5

Thiruvazhundur 1 - (தந்தை காலில்)

திருவழுந்தூர் 1
Thiruvazhundur 1 - (தந்தை காலில்)
The presiding deity of Thiruvazhundur is known as Amaruviyappan, and the Thayar is Sengamalavalli. The āzhvār sings these verses, expressing how the Lord, who always resides in his heart and eyes, fills his being with divine presence.
திருவழுந்தூர்ப் பெருமாளின் திருநாமம் ஆமருவியப்பன். தாயாரின் பெயர் செங்கமலவல்லி. தம் உள்ளத்திலும் கண்ணிலும் எப்பொழுதும் நிற்கும் பெருமாளை ஆழ்வார் ஈண்டுப் பாடியுள்ளார்.
Verses: 1588 to 1597
Grammar: Aṟuchīrk Kaḻinediladi Āsiriya Viruththam / அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
Pan: தக்கராகம்
  • PT 7.5.1
    1588 ## தந்தை காலில் பெரு விலங்கு * தாள் அவிழ * நள் இருட்கண்
    வந்த எந்தை பெருமானார் * மருவி நின்ற ஊர்போலும் *
    முந்தி வானம் மழை பொழியும் * மூவா உருவின் மறையாளர் *
    அந்தி மூன்றும் அனல் ஓம்பும் * அணி ஆர் வீதி அழுந்தூரே 1
  • PT 7.5.2
    1589 பாரித்து எழுந்த * படை மன்னர் தம்மை மாள * பாரதத்துத்
    தேரில் பாகன் ஆய் ஊர்ந்த * தேவ தேவன் ஊர்போலும் **
    நீரில் பணைத்த நெடு வாளைக்கு * அஞ்சிப் போன குருகு இனங்கள் *
    ஆரல் கவுளோடு அருகு அணையும் * அணி ஆர் வயல் சூழ் அழுந்தூரே 2
  • PT 7.5.3
    1590 செம் பொன் மதிள் சூழ் தென் இலங்கைக்கு இறைவன் * சிரங்கள் ஐ இரண்டும் *
    உம்பர் வாளிக்கு இலக்கு ஆக * உதிர்த்த உரவோன் ஊர்போலும் **
    கொம்பில் ஆர்ந்த மாதவிமேல் * கோதி மேய்ந்த வண்டு இனங்கள் *
    அம்பு அராவும் கண் மடவார் * ஐம்பால் அணையும் அழுந்தூரே 3
  • PT 7.5.4
    1591 வெள்ளத்துள் ஓர் ஆல் இலைமேல் மேவி * அடியேன் மனம் புகுந்து * என்
    உள்ளத்துள்ளும் கண்ணுள்ளும் * நின்றார் நின்ற ஊர்போலும் **
    புள்ளுப் பிள்ளைக்கு இரை தேடிப் * போன காதல் பெடையோடும் *
    அள்ளல் செறுவில் கயல் நாடும் * அணி ஆர் வயல் சூழ் அழுந்தூரே 4
  • PT 7.5.5
    1592 பகலும் இரவும் தானே ஆய்ப் * பாரும் விண்ணும் தானே ஆய் *
    நிகரில் சுடர் ஆய் இருள் ஆகி * நின்றார் நின்ற ஊர்போலும் **
    துகிலின் கொடியும் தேர்த் துகளும் * துன்னி மாதர் கூந்தல்வாய் *
    அகிலின் புகையால் முகில் ஏய்க்கும் * அணி ஆர் வீதி அழுந்தூரே 5
  • PT 7.5.6
    1593 ஏடு இலங்கு தாமரைபோல் * செவ்வாய் முறுவல் செய்தருளி *
    மாடு வந்து என் மனம் புகுந்து * நின்றார் நின்ற ஊர்போலும் **
    நீடு மாடத் தனிச் சூலம் * போழக் கொண்டல் துளி தூவ *
    ஆடல் அரவத்து ஆர்ப்பு ஓவா * அணி ஆர் வீதி அழுந்தூரே 6
  • PT 7.5.7
    1594 மாலைப் புகுந்து மலர் அணைமேல் * வைகி அடியேன் மனம் புகுந்து * என்
    நீலக் கண்கள் பனி மல்க * நின்றார் நின்ற ஊர்போலும் **
    வேலைக் கடல்போல் நெடு வீதி * விண் தோய் சுதை வெண் மணி மாடத்து *
    ஆலைப் புகையால் அழல் கதிரை மறைக்கும் * வீதி அழுந்தூரே 7
  • PT 7.5.8
    1595 வஞ்சி மருங்குல் இடை நோவ * மணந்து நின்ற கனவகத்து * என்
    நெஞ்சு நிறையக் கைகூப்பி * நின்றார் நின்ற ஊர்போலும் **
    பஞ்சி அன்ன மெல் அடி * நல் பாவைமார்கள் * ஆடகத்தின்
    அம் சிலம்பின் ஆர்ப்பு ஓவா * அணி ஆர் வீதி அழுந்தூரே 8
  • PT 7.5.9
    1596 என் ஐம்புலனும் எழிலும் கொண்டு * இங்கே நெருநல் எழுந்தருளி *
    பொன் அம் கலைகள் மெலிவு எய்தப் * போன புனிதர் ஊர்போலும் **
    மன்னும் முது நீர் அரவிந்த மலர்மேல் * வரி வண்டு இசை பாட *
    அன்னம் பெடையோடு உடன் ஆடும் * அணி ஆர் வயல் சூழ் அழுந்தூரே 9
  • PT 7.5.10
    1597 ## நெல்லில் குவளை கண் காட்ட * நீரில் குமுதம் வாய் காட்ட *
    அல்லிக் கமலம் முகம் காட்டும் * கழனி அழுந்தூர் நின்றானை **
    வல்லிப் பொதும்பில் குயில் கூவும் * மங்கை வேந்தன் பரகாலன் *
    சொல்லில் பொலிந்த தமிழ் மாலை * சொல்லப் பாவம் நில்லாவே 10