Chozha Nādu·Temple 40 of 108

Thiru Chitra Koodam

திருச்சித்ரகூடம்

Chidhambaram

ஸ்ரீ புண்டரீகவல்லீ ஸமேத ஸ்ரீ கோவிந்தராஜாய நமஹ
Image 1
40
Presiding Deities
MoolavarGovindarājan
ThāyārSri Pundareeka Valli
UtsavarDevādhi Devan (Pārthasārathy)
Sayana (Reclining)Faces East Directions
VimānamSāthveega
PushkaraniPundariga
ThirukolamSayana (Reclining)
DirectionEast
Location
MandalamChozha Nādu
AreaChidhambaram
StateTamilNadu
Tradition
SampradāyamThenkalai
Festivals & Timings
Timings6:00 a.m. to 1:00 p.m. 3:30 p.m. to 8:30 p.m. (Please take the archaga from their home for darshan.)
Recitation
Translation

PMT 10.1

741 அங்கணெடுமதிள்புடைசூழயோத்தியென்னும்

அணிநகரத்துலகனைத்தும்விளக்கும்சோதி *

வெங்கதிரோன்குலத்துக்கோர்விளக்காய்த்தோன்றி

விண்முழுதுமுயக்கொண்டவீரன் தன்னை *

செங்கணெடுங்கருமுகிலையிராமன் தன்னைத்

தில்லைநகர்த்திருச்சித்ரகூடந்தன்னுள் *

எங்கள்தனிமுதல்வனையெம்பெருமான்தன்னை

என்றுகொலோ? கண்குளிரக்காணும்நாளே. (2)

PMT 10.3

743 செவ்வரிநற்கருநெடுங்கண்சீதைக்காகிச்

சினவிடையோன்சிலையிறுத்து மழுவாளேந்தி *

வெவ்வரிநற்சிலைவாங்கிவென்றிகொண்டு

வேல்வேந்தர்பகைதடிந்தவீரன்தன்னை *

தெவ்வரஞ்சநெடும்புரிசையுயர்ந்தபாங்கர்த்

தில்லைநகர்த்திருச்சித்ரகூடந்தன்னுள் *

எவ்வரிவெஞ்சிலைத் தடக்கையிராமன்தன்னை

இறைஞ்சுவாரிணையடியேயிறைஞ்சினேனே.

PMT 10.4

744 தொத்தலர்பூஞ்சுரிகுழல்கைகேசிசொல்லால் *

தொன்னகரந்துறந்து * துறைக்கங்கைதன்னை

பத்தியுடைக்குகன்கடத்தவனம்போய்ப்புக்குப்

பரதனுக்குபாதுகமுமரசுமீந்து *

சித்திரகூடத்திருந்தான்றன்னை இன்று *

தில்லைநகர்த்திருச்சித்ரகூடந்தன்னுள் *

எத்தனையும்கண்குளிரக்காணப்பெற்ற

இருநிலத்தார்க்கு இமையவர்நேரொவ்வார்தாமே.

PMT 10.5

745 வலிவணக்குவரைநெடுந்தோள்விராதைக்கொன்று

வண்டமிழ்மாமுனிகொடுத்தவரிவில்வாங்கி *

கலைவணக்குநோக்கரக்கிமூக்கைநீக்கிக்

கரனோடுதூடணன்றன்னுயிரைவாங்கி *

சிலைவணக்கிமான்மரியவெய்தான்தன்னைத்

தில்லைநகர்த்திருச்சித்ரகூடந்தன்னுள் *

தலைவணக்கிக்கைகூப்பியேத்தவல்லார்

திரிதலால் தவமுடைத்துத்தரணிதானே.

PMT 10.8

748 அம்பொனெடுமணிமாடஅயோத்தியெய்தி

அரசெய்திஅகத்தியன்வாய்த்தான்முன்கொன்றான்

தன் * பெருந்தொல்கதைக்கேட்டுமிதிலைச்செல்வி

உலகுய்யத்திருவயிறுவாய்த்தமக்கள் *

செம்பவளத்திரள்வாய்த்தன்சரிதைகேட்டான்

தில்லைநகர்த்திருச்சித்ரகூடந்தன்னுள் *

எம்பெருமான்தன்சரிதைசெவியால்கண்ணால்

பருகுவோம் * இன்னமுதைம்மதியோமின்றே.

PMT 10.9

749 செறிதவச்சம்புகன்றன்னைச்சென்றுகொன்று

செழுமறையோனுயிர்மீட்டுத் * தவத்தோனீந்த

நிறைமணிப்பூணணியுங்கொண்டுஇலவணன்தன்னைத்

தம்பியால்வானேற்றிமுனிவன்வேண்ட *

திறல்விளங்குமிலக்குமனைப்பிரிந்தான்தன்னைத்

தில்லைநகர்த்திருச்சித்ரகூடந்தன்னுள்

உறைவானை * மறவாதவுள்ளந்தன்னை

உடையோம் * மற்றுறுதுயர மடையோமின்றே.

PMT 10.10

750 அன்றுசராசரங்களைவைகுந்தத்தேற்றி

அடலரவப்பகையேறியசுரர் தம்மை

வென்று * இலங்குமணிநெடுந்தோள்நான்கும்தோன்ற

விண்முழுதுமெதிர்வரத்தன்தாமம்மேவி *

சென்றினிதுவீற்றிருந்தவம்மான்தன்னைத்

தில்லைநகர்த்திருச்சித்ரகூடந்தன்னுள் *

என்றும்நின்றானவனிவனென்றேத்தி நாளும்

இன்றைஞ்சுமினோஎப்பொழுதும்தொண்டீர்! நீரே. (2)

PMT 10.11

751 தில்லைநகர்த்திருச்சித்ரகூடந்தன்னுள்

திறல்விளங்குமாருதியோடமர்ந்தான்தன்னை *

எல்லையில்சீர்த்தயரதன்றன்மகனாய்த்தோன்றிற்று

அதுமுதலாத் தன்னுலகம்புக்கதீறா *

கொல்லியலும்படைத்தானைக்கொற்றவொள்வாள்

கோழியர்கோன்குடைக்குலசேகரஞ்சொற்செய்த *

நல்லியலின்தமிழ்மாலைபத்தும்வல்லார்

நலந்திகழ்நாரணனடிக்கீழ்நண்ணுவாரே (2)

PT 3.2.3

1160 வெம்பும்சினத்துப்புனக்கேழலொன்றாய்

விரிநீர்முதுவெள்ளம்உள்புக்கழுந்த *

வம்புண்பொழில்சூழுலகன்றெடுத்தான்

அடிப்போதுஅணைவான்விருப்போடுஇருப்பீர்! *

பைம்பொன்னும்முத்தும்மணியும்கொணர்ந்து

படைமன்னவன்பல்லவர்க்கோன்பணிந்த *

செம்பொன்மணிமாடங்கள்சூழ்ந்ததில்லைத்

திருச்சித்ரகூடம்சென்றுசேர்மின்களே.

PT 3.2.9

1166 செருநீலவேற்கண்மடவார்திறத்துச்

சினத்தோடுநின்றுமனத்தால்வளர்க்கும் *

அருநீலபாவம்அகலப் புகழ்சேர்

அமரர்க்கும்எய்தாத அண்டத்துஇருப்பீர்! *

பெருநீர்நிவாவுந்திமுத்தங்கொணர்ந்து

எங்கும்வித்தும்வயலுள்கயல்பாய்ந்துஉகள *

திருநீலம்நின்றுதிகழ்கின்ற தில்லைத்

திருச்சித்ரகூடம்சென்றுசேர்மின்களே.