The Lord of Citrakūṭa is He Who Broke the Bow for Sītā
சீதைக்காகச் சிலையிறுத்தவன் சித்திரகூடத்தான்
743 செவ்வரிநற்கருநெடுங்கண்சீதைக்காகிச்
சினவிடையோன்சிலையிறுத்து மழுவாளேந்தி *
வெவ்வரிநற்சிலைவாங்கிவென்றிகொண்டு
வேல்வேந்தர்பகைதடிந்தவீரன்தன்னை *
தெவ்வரஞ்சநெடும்புரிசையுயர்ந்தபாங்கர்த்
தில்லைநகர்த்திருச்சித்ரகூடந்தன்னுள் *
எவ்வரிவெஞ்சிலைத் தடக்கையிராமன்தன்னை
இறைஞ்சுவாரிணையடியேயிறைஞ்சினேனே.