Your browser does not support the audio element.
audio
3464 கங்குலும்பகலும்கண்துயிலறியாள்
கண்ணநீர்கைகளாலிறைக்கும் *
சங்குசக்கரங்களென்றுகைகூப்பும்
தாமரைக்கண்ணென்றேதளரும் *
எங்ஙனேதரிக்கேன்உன்னைவிட்டு? என்னும்
இருநிலம்கைதுழாவிருக்கும் *
செங்கயல்பாய்நீர்த்திருவரங்கத்தாய்!
இவள்திறத்தென்செய்கின்றாயே? (2)
3465 என்செய்கின்றாய்? என்தாமரைக் கண்ணா!
என்னும் கண்ணீர்மல்கவிருக்கும் *
என்செய்கேன்? எறிநீர்த்திருவரங்கத்தாய்
என்னும் வெவ்வுயிர்த்துயிர்த்துருகும் *
முன்செய்தவினையே! முகப்படாயென்னும்
முகில்வண்ணா! தகுவதோ? என்னும் *
முன்செய்திவ்வுலகமுண்டுமிழ்ந்தளந்தாய்
எங்கொலோமுடிகின்றதிவட்கே?
3466 வட்கிலளிறையும் மணிவண்ணா! என்னும்
வானமேநோக்கும்மையாக்கும் *
உட்குடையசுரருயிரெல்லாமுண்ட
ஒருவனே! என்னும்உள்ளுருகும் *
கட்கிலீ! உன்னைக்காணுமாறருளாய்
காகுத்தா! கண்ணனே! என்னும் *
திட்கொடிமதிள்சூழ்திருவரங்கத்தாய்?
இவள்திறத்தென்செய்திட்டாயே?
3467 இட்டகாலிட்டகையளாயிருக்கும்
எழுந்துலாய்மயங்கும்கைகூப்பும் *
கட்டமேகாதலென்றுமூர்ச்சிக்கும்
கடல்வண்ணா! கடியைகாணென்னும் *
வட்டவாய்நேமிவலங்கையா! என்னும்
வந்திடாயென்றென்றேமயங்கும் *
சிட்டனே! செழுநீர்த்திருவரங்கத்தாய்!
இவள்திறத்தென்சிந்தித்தாயே?
3468 சிந்திக்கும்திசைக்கும்தேறும்கை கூப்பும்
திருவரங்கத்துள்ளாய்! என்னும்
வந்திக்கும் * ஆங்கேமழைக்கண்ணீர்மல்க
அந்திப்போதவுணனுடலிடந்தானே!
அலைகடல்கடைந்தவாரமுதே *
சந்தித்துன்சரணம்சார்வதேவலித்த
தையலைமையல்செய்தானே!
3469 மையல்செய்தென்னைமனம்கவர்ந்தானே!
என்னும் மாமாயனே! என்னும் *
செய்யவாய்மணியே! என்னும் தண்புனல்சூழ்
திருவரங்கத்துள்ளாய்! என்னும் *
வெய்யவாள்தண்டுசங்குசக்கரம்வில்லேந்தும்
விண்ணோர்முதல்! என்னும் *
பைகொள்பாம்பணையாய்! இவள்திறத்தருளாய்
பாவியேன்செயற்பாலதுவே.
3470 பாலதுன்பங்களின்பங்கள்படைத்தாய்!
பற்றிலார்பற்றநின்றானே! *
காலசக்கரத்தாய்! கடலிடங்கொண்ட
கடல்வண்ணா! கண்ணணே! என்னும் *
சேல்கொள்தண்புனல்சூழ்திருவரங்கத்தாய்!
என்னும் என்தீர்த்தனே! என்னும் *
கோலமாமழைக்கண்பனிமல்கவிருக்கும்
என்னுடைக்கோமளக்கொழுந்தே.
3471 கொழுந்துவானவர்கட்கு! என்னும் குன்றேந்திக்
கோநிரைகாத்தவன்! என்னும் *
அழுந்தொழும்ஆவியனலவெவ்வுயிர்க்கும்
அஞ்சனவண்ணனே! என்னும் *
எழுந்துமேல்நோக்கியிமைப்பிலளிருக்கும்
எங்ஙனேநோக்குகேன்? என்னும் *
செழுந்தடம்புனல்சூழ்திருவரங்கத்தாய்!
என்செய்கேன்என்திருமகட்கே?
3472 என்திருமகள்சேர்மார்வனே! என்னு
மென்னுடையாவியே! என்னும் *
நின்திருவெயிற்றாலிடந்துநீகொண்ட
நிலமகள்கேள்வனே! என்னும் *
அன்றுருவேழும்தழுவிநீகொண்ட
ஆய்மகளன்பனே! என்னும் *
தென்திருவரங்கம்கோயில்கொண்டானே!
தெளிகிலேன்முடிவிவள்தனக்கே. (2)
3473 முடிவிவள்தனக்கொன்றறிகிலேனென்னும்
மூவுலகாளியே! என்னும் *
கடிகமழ்கொன்றைச்சடையனே! என்னும்
நான்முகக்கடவுளே! என்னும் *
வடிவுடைவானோர்தலைவனே! என்னும்
வண்திருவரங்கனே! என்னும் *
அடியடையாதாள்போல்இவளணுகி
யடைந்தனள் முகில்வண்ணனடியே.
3474 முகில்வண்ணனடியையடைந்தருள்சூடி
உய்ந்தவன் மொய்புனல்பொருநல் *
துகில்வண்ணத்தூநீர்ச்சேர்ப்பன் வண்பொழில்சூழ்
வண்குருகூர்ச்சடகோபன் *
முகில்வண்ணனடிமேல்சொன்னசொல்மாலை
ஆயிரத்திப்பத்தும்வல்லார் *
முகில்வண்ணவானத்திமையவர்சூழ
விருப்பர் பேரின்பவெள்ளத்தே. (2)