Your browser does not support the audio element.
audio
3420 பொன்னுலகாளீரோ! புவனிமுழுதாளீரோ? *
நன்னலப்புள்ளினங்காள்! வினையாட்டியேன்நானிரந்தேன் *
முன்னுலகங்களெல்லாம்படைத்த முகில்வண்ணன் கண்ணன் *
என்னலங்கொண்டபிரான்தனக்கு என்நிலைமை யுரைத்தே. (2)
3421 மையமர்வாள்நெடுங்கண் மங்கைமார்முன்பென் கையிருந்து *
நெய்யமரின்னடிசில் நிச்சல் பாலோடு மேவீரோ? *
கையமர்சக்கரத்து என்கனிவாய்ப்பெருமானைக் கண்டு *
மெய்யமர்காதல்சொல்லிக் கிளிகாள்! விரைந்தோடி வந்தே.
3422 ஓடிவந்தென்குழல்மேல் ஒளிமாமலரூதீரோ? *
கூடிய வண்டினங்காள் குருநாடுடையைவர்கட்காய் *
ஆடியமாநெடுந்தேர்ப் படைநீறெழச்செற்றபிரான் *
சூடியதண்துளவமுண்ட தூமதுவாய்கள்கொண்டே.
3423 தூமதுவாய்கள்கொண்டுவந்து என்முல்லைகள்மேல் தும்பிகாள் *
பூமதுஉண்ணச்செல்லில் வினையேனைப்பொய் செய்தகன்ற *
மாமதுவார்தண்துழாய்முடி வானவர்கோனைக்கண்டு *
யாமிதுவோதக்கவாறு என்னவேண்டும்கண்டீர் நுங்கட்கே.
3424 நுங்கட்குயானுரைக்கேன்வம்மின் யான்வளர்த்த கிளிகாள் *
வெங்கட்புள்ளூர்ந்துவந்து வினையேனைநெஞ்சங்கவர்ந்த *
செங்கட்கருமுகிலைச் செய்யவாய்ச் செழுங்கற்பகத்தை *
எங்குச்சென்றாகிலும்கண்டு இதுவோதக்கவாறு என்மினே.
3425 என்மின்னுநூல்மார்வன் என்கரும்பெருமா னென்கண்ணன் *
தன்மன்னுநீள்கழல்மேல் தண்துழாய் நமக்கன்றிநல்கான் *
கன்மின்கள்என்றும்மையான் கற்பியாவைத்தமாற்றம் சொல்லி *
சென்மின்கள்தீவினையேன் வளர்த்தசிறுபூவைகளே.
3426 பூவைகள்போல்நிறத்தன் புண்டரீகங்கள்போலும் கண்ணன் *
யாவையும்யாவருமாய் நின்றமாயனென்னாழிப்பிரான் *
மாவைவல்வாய்பிளந்த மதுசூதற்கென்மாற்றம் சொல்லி *
பாவைகள்! தீர்க்கிற்றிரே வினையாட்டியேன்பாசறவே.
3427 பாசறவெய்தியின்னே வினையேனெனையூழிநைவேன்? *
ஆசறுதூவிவெள்ளைக்குருகே அருள்செய்தொருநாள் *
மாசறுநீலச்சுடர்முடி வானவர்கோனைக் கண்டு *
ஏசறும்நும்மையல்லால் மறுநோக்கிலள்பேர்த்துமற்றே.
3428 பேர்த்துமற்றோர்களைகண் வினையாட்டியேன் நானொன்றிலேன் *
நீர்த்திரைமேலுலவி இரைதேரும்புதாவினங்காள் *
கார்த்திரள்மாமுகில்போல்கண்ணன் விண்ணவர்கோனைக் கண்டு *
வார்த்தைகள்கொண்டருளியுரையீர்வைகல்வந்திருந்தே.
3429 வந்திருந்தும்உம்முடைய மணிச்சேவலும்நீருமெல்லாம் *
அந்தரமொன்றுமின்றி அலர்மேலசையுமன்னங்காள்! *
என்திருமார்வற்குஎன்னை இன்னவாறிவள்காண்மி னென்று *
மந்திரத்தொன்றுஉணர்த்தியுரையீர் மறுமாற்றங்களே.
3430 மாற்றங்களாய்ந்துகொண்டு மதுசூதபிரானடிமேல் *
நாற்றங்கொள்பூம்பொழில்சூழ் குருகூர்ச்சடகோபன் சொன்ன *
தோற்றங்களாயிரத்துள் இவையுமொருபத்தும்வல்லார் *
ஊற்றின்கண்நுண்மணல்போல் உருகாநிற்பர்நீராயே. (2)