Your browser does not support the audio element.
audio
3354 மின்னிடைமடவார்கள்நின்னருள்சூடுவார் முன்பு நானதஞ்சுவன் *
மன்னுடையிலங்கை அரண்காய்ந்தமாயவனே! *
உன்னுடையசுண்டாயம்நானறிவன் இனிஅதுகொண்டு செய்வதென்? *
என்னுடையபந்தும்கழலும் தந்துபோகுநம்பீ! (2)
3355 போகுநம்பீ! உன்தாமரைபுரைகண்ணிணையும் செவ்வாய் முறுவலும் *
ஆகுலங்கள்செய்ய அழிதற்கேநோற்றோமே? யாம் *
தோகைமாமயிலார்கள்நின்னருள்சூடுவார் செவியோசை வைத்தெழ *
ஆகள்போகவிட்டுக் குழலூதுபோயிருந்தே.
3356 போயிருந்துநின்புள்ளுவம் அறியாதவர்க்குஉரைநம்பீ! * நின்செய்ய
வாயிருங்கனியுங்கண்களும் விபரீதமிந்நாள் *
வேயிருந்தடந்தோளினார் இத்திருவருள்பெறுவார் யவர்கொல்? *
மாயிருங்கடலைக்கடைந்த பெருமானாலே.
3357 ஆலினீளிலையேழுலகமுண்டு அன்றுநீகிடந்தாய் * உன் மாயங்கள்
மேலைவானவருமறியார் இனியெம்பரமே? *
வேலினேர்தடங்கண்ணினார் விளையாடுசூழலைச்சூழவே நின்று *
காலிமேய்க்கவல்லாய்! எம்மைநீகழறேலே.
3358 கழறேல்நம்பீ! உன்கைதவம்மண்ணும்விண்ணும் நன்கறியும் * திண்சக்கர
நிழறுதொல்படையாய்! உனக்கொன்றுணர்த்துவன்நான் *
மழறுதேன்மொழியார்கள்நின்னருள்சூடுவார் மனம்வாடிநிற்க * எம்
குழறுபூவையோடும் கிளியோடும்குழகேலே.
3359 குழகியெங்கள்குழமணன்கொண்டு கோயின்மைசெய்து கன்மமொன்றில்லை *
பழகியாமிருப்போம் பரமேஇத்திருவருள்கள்? *
அழகியாரிவ்வுலகமூன்றுக்கும் தேவிமைதகுவார்பலருளர் *
கழகமேறேல்நம்பீ! உனக்குமிளைதேகன்மமே.
3360 கன்மமன்றெங்கள்கையிற்பாவைபறிப்பது கடல் ஞாலமுண்டிட்ட *
நின்மலா! நெடியாய்! உனக்கேலும்பிழைபிழையே *
வன்மமேசொல்லியெம்மைநீவிளையாடுதி அதுகேட்கில் என்னைமார் *
தன்மபாவமென்னார் ஒருநான்றுதடிபிணக்கே.
3361 பிணக்கியாவையும்யாவரும் பிழையாமல்பேதித்தும்பேதி யாதது * ஓர்
கணக்கில்கீர்த்திவெள்ளக் கதிர்ஞானமூர்த்தியினாய்! *
இணக்கியெம்மையெந்தோழிமார் விளையாடப்போது மினென்னப்போந்தோமை *
உணக்கிநீவளைத்தால் என்சொல்லாருகவாதவரே?
3362 உகவையால்நெஞ்சமுள்ளுருகி உன்தாமரைத்தடங்கண் விழிகளின் *
அகவலைப்படுப்பான் அழித்தாயுன்திருவடியால் *
தகவுசெய்திலைஎங்கள்சிற்றிலும் யாமடுசிறுசோறும்கண்டு * நின்
முகவொளிதிகழ முறுவல்செய்துநின்றிலையே.
3363 நின்றிலங்குமுடியினாய்! இருபத்தோர்காலரசுகளைகட்ட *
வென்றிநீள்மழுவா! வியன்ஞாலம்முன்படைத்தாய் *
இன்றிவ்வாயர்குலத்தைவீடுய்யத்தோன்றிய கருமாணிக்கச்சுடர்! *
நின்றன்னால்நலிவேபடுவோம்என்றும் ஆய்ச்சியோமே.
3364 ஆய்ச்சியாகியவன்னையால் அன்றுவெண்ணெய் வார்த்தையுள் * சீற்றமுண்டழு
கூத்தவப்பன்தன்னைக் குருகூர்ச்சடகோபன் *
ஏத்தியதமிழ்மாலை ஆயிரத்துள்இவையுமோர்பத்திசை யொடும் *
நாத்தன்னால்நவிலவுரைப்பார்க்கு இல்லைநல்குரவே. (2)