Your browser does not support the audio element.
audio
3442 உலகமுண்டபெருவாயா! உலப்பில்கீர்த்தியம்மானே! *
நிலவுஞ்சுடர்சூழொளிமூர்த்தி! நெடியாய்! அடியேனாருயிரே! *
திலதமுலகுக்காய்நின்ற திருவேங்கடத்தெம் பெருமானே! *
குலதொல்லடியேன்உனபாதம் கூடுமாறுகூறாயே. (2)
3443 கூறாய்நீறாய்நிலனாகிக் கொடுவல்லசுரர்குலமெல்லாம் *
சீறாவெறியுந்திருநேமிவலவா! தெய்வக்கோமானே! *
சேறார்சுனைத்தாமரைசெந்தீமலரும் திருவேங்கடத்தானே! *
ஆறாவன்பிலடியேன் உன்னடிசேர்வண்ணம்அருளாயே.
3444 வண்ணமருள்கொளணிமேகவண்ணா! மாயவம்மானே! *
எண்ணம்புகுந்துதித்திக்குமமுதே! இமையோரதிபதியே! *
தெண்ணலருவிமணிபொன்முத்தலைக்கும் திருவேங்கடத்தானே! *
அண்ணலே! உன்னடிசேரஅடியேற்குஆவாவென்னாயே.
3445 ஆவா! என்னாதுஉலகத்தையலைக்கும் அசுரர்வாணாள்மேல் *
தீவாய்வாளிமழைபொழிந்தசிலையா! திருமாமகள்கேள்வா!
தேவா! * சுரர்கள்முனிக்கணங்கள்விரும்பும் திருவேங்கடத்தானே! *
பூவார்கழல்கள்அருவினையேன் பொருந்துமாறு புணராயே.
3446 புணராநின்றமரமேழ் அன்றெய்தஒருவில்வலவாவோ! *
புணரேய்நின்றமரமிரண்டின் நடுவேபோனமுதல்வாவோ! *
திணரார்மேகமெனக்களிறுசேரும் திருவேங்கடத்தானே! *
திணரார்சார்ங்கத்துஉனபாதம் சேர்வதடியேனெந் நாளே?
3447 எந்நாளே? நாம்மண்ணளந்த இணைத்தாமரைகள் காண்பதற்கென்று *
எந்நாளும்நின்றிமையோர்களேத்தி இறைஞ்சி யினமினமாய் *
மெய்ந்நாமனத்தால்வழிபாடுசெய்யும் திருவேங்கடத்தானே! *
மெய்ந்நானெய்தியெந்நாள் உன்னடிக்கணடியேன் மேவுவதே?
3448 அடியேன்மேவியமர்கின்றஅமுதே! இமையோரதிபதியே! *
கொடியாவடுபுள்ளுடையானே! கோலக்கனிவாய்ப் பெருமானே! *
செடியார்வினைகள்தீர்மருந்தே! திருவேங்கடத்தெம் பெருமானே! *
நொடியார்பொழுதும்உன்பாதம் காணநோலாதாற்றேனே.
3449 நோலாதாற்றேன்உனபாதம் காணவென்று நுண்ணுணர்வின் *
நீலார்கண்டத்தம்மானும் நிறைநான்முகனுமிந்திரனும் *
சேலேய்கண்ணார்பலர்சூழவிரும்பும் திருவேங்கடத்தானே! *
மாலாய்மயக்கிஅடியேன்பால் வந்தாய்போலவாராயே.
3450 வந்தாய்போலேவாராதாய் வாராதாய்போல்வருவானே! *
செந்தாமரைக்கண்செங்கனிவாய் நால்தோளமுதே! எனதுயிரே! *
சிந்தாமணிகள்பகரல்லைப்பகல்செய் திருவேங்கடத்தானே! *
அந்தோ! அடியேன்உனபாதம் அகலகில்லேனிறையுமே.
3451 அகலகில்லேனிறையுமென்று அலர்மேல்மங்கையுறைமார்பா! *
நிகரில்புகழாய்! உலகமூன்றுடையாய்! என்னையாள்வானே! *
நிகரிலமரர்முனிக்கணங்கள்விரும்பும் திருவேங்கடத்தானே! *
புகலொன்றில்லாஅடியேன் உன்னடிக்கீழமர்ந்துபுகுந்தேனே. (2)
3452 அடிக்கீழமர்ந்துபுகுந்து அடியீர்! வாழ்மினென்றென்றருள்கொடுக்கும் *
படிக்கேழில்லாப்பெருமானைப்பழனக்குருகூர்ச்சடகோபன் *
முடிப்பான்சொன்னவாயிரத்துத் திருவேங்கடத்துக்கிவைபத்தும் *
பிடித்தார்பிடித்தார்வீற்றிருந்து பெரியவானுள்நிலாவுவரே. (2)