Your browser does not support the audio element.
audio
3255 மாசறுசோதி என்செய்யவாய்மணிக்குன்றத்தை *
ஆசறுசீலனை ஆதிமூர்த்தியைநாடியே *
பாசறவெய்தி அறிவிழந்தெனைநாளையம்? *
ஏசறுமூரவர்கவ்வை தோழீ! என்செய்யுமே? (2)
3256 என்செய்யுமூரவர்கவ்வை? தோழீ! இனிநம்மை *
என்செய்யதாமரைக்கண்ணன் என்னைநிறைகொண்டான் *
முன்செய்யமாமையிழந்து மேனிமெலிவெய்தி *
என்செய்யவாயும்கருங்கண்ணும் பயப்பூர்ந்தவே.
3257 ஊர்ந்தசகடம்உதைத்தபாதத்தன் * பேய்முலை
சார்ந்துசுவைத்தசெவ்வாயன் என்னைநிறைகொண்டான் *
பேர்ந்தும்பெயர்ந்தும் அவனோடன்றியோர்சொல்லிலேன் *
தீர்ந்தவென்தோழீ! என்செய்யும்ஊரவர்கவ்வையே?
3258 ஊரவர்கவ்வையெருவிட்டு அன்னைசொல்நீர்படுத்து *
ஈரநெல்வித்திமுளைத்த நெஞ்சப்பெருஞ்செய்யுள் *
பேரமர்காதல் கடல்புரையவிளைவித்த *
காரமர்மேனி! நங்கண்ணன்தோழீ! கடியனே.
3259 கடியன்கொடியன்நெடியமால் உலகங்கொண்ட
அடியன் * அறிவருமேனிமாயத்தன் * ஆகிலும்
கொடியவென்னெஞ்சம் அவனென்றேகிடக்கும்எல்லே! *
துடிகொளிடைமடத்தோழீ! அன்னையென்செய்யுமே?
3260 அன்னையென்செய்யிலென்? ஊரென்சொல்லிலென்? தோழிமீர்! *
என்னையினியுமக்காசையில்லை அகப்பட்டேன் *
முன்னையமரர்முதல்வன் வண்துவராபதி
மன்னன் * மணிவண்ணன் வாசுதேவன்வலையுளே.
3261 வலையுளகப்படுத்து என்னைநன்நெஞ்சம்கூவிக்கொண்டு *
அலைகடற்பள்ளியம்மானை ஆழிப்பிரான்தன்னை *
கலைகொளகலல்குல்தோழீ! நம்கண்களால்கண்டு *
தலையில்வணங்கவும்ஆங்கொலோ? தையலார்முன்பே.
3262 பேய்முலையுண்டுசகடம்பாய்ந்து மருதிடைப்
போய்முதல்சாய்த்து * புள்வாய்பிளந்துகளிறட்ட *
தூமுறுவல் தொண்டைவாய்ப்பிரானை எந்நாள்கொலோ? *
யாமுறுகின்றதுதோழீ! அன்னையர்நாணவே.
3263 நாணும்நிறையும்கவர்ந்து என்னைநல்நெஞ்சம்கூவிக் கொண்டு *
சேணுயர்வானத்திருக்கும்தேவபிரான்தன்னை *
ஆணையென்? தோழீ! உலகுதோறலர் தூற்றி * ஆம்
கோணைகள்செய்து குதிரியாய்மடலூர்துமே.
3264 யாமடலூர்ந்தும் எம்மாழியங்கைப்பிரானுடை *
தூமடல்தண்ணந்துழாய் மலர்கொண்டுசூடுவோம் *
யாமடமின்றித் தெருவுதோறு அயல்தையலார் *
நாமடங்கப்பழிதூற்றி நாடுமிரைக்கவே.
3265 இரைக்குங்கருங்கடல்வண்ணன் கண்ணபிரான்தன்னை *
விரைக்கொள்பொழில் குருகூர்ச்சடகோபன்சொன்ன *
நிரைக்கொளந்தாதி ஓராயிரத்துள்இப்பத்தும் *
உரைக்கவல்லார்க்கு வைகுந்தமாகும்தம்மூரெல்லாம். (2)