Your browser does not support the audio element.
audio
2991 எம்மாவீட்டுத் திறமும்செப்பம் * நின்
செம்மாபாதபற்புத் தலைசேர்த்து ஒல்லை *
கைம்மாதுன்பம் கடிந்தபிரானே *
அம்மா! அடியேன் வேண்டுவதீதே. (2)
2992 ஈதேயானுன்னைக் கொள்வதெஞ்ஞான்றும் * என்
மைதோய்சோதி மணிவண்ணவெந்தாய்! *
எய்தாநின்கழல் யானெய்த * ஞானக்
கைதா காலக்கழிவுசெய்யேலே.
2993 செய்யேல்தீவினையென்று அருள்செய்யும் * என்
கையார்சக்கரக் கண்ணபிரானே! *
ஐயார்கண்டமடைக்கிலும் நின்கழல்
எய்யாதேத்த * அருள்செய்எனக்கே.
2994 எனக்கேயாட்செய் எக்காலத்துமென்று * என்
மனக்கேவந்து இடைவீடின்றிமன்னி *
தனக்கேயாக எனைக்கொள்ளுமீதே *
எனக்கேகண்ணனை யான்கொள்சிறப்பே.
2995 சிறப்பில்வீடு சுவர்க்கம்நரகம் *
இறப்பிலெய்துக வெய்தற்க * யானும்
பிறப்பில் பல்பிறவிப்பெருமானை *
மறப்பொன்றின்றி என்னும்மகிழ்வேனே.
2996 மகிழ்கொள்தெய்வம் உலோகமலோகம் *
மகிழ்கொள்சோதி மலர்ந்தவம்மானே! *
மகிழ்கொள்சிந்தை சொல்செய்கைகொண்டு * என்றும்
மகிழ்வுற்று உன்னைவணங்கவாராயே.
2997 வாராயுன் திருப்பாதமலர்க்கீழ் *
பேராதேயான்வந்து அடையும்படி
தாராதாய்! * உன்னையென்னுள்வைப்பில் என்றும்
ஆராதாய்! * எனக்குஎன்றும்எக்காலே.
2998 எக்காலத்தெந்தையாய் என்னுள்மன்னில் * மற்
றெக்காலத்திலும் யாதொன்றும்வேண்டேன் *
மிக்கார் வேதவிமலர்விழுங்கும் * என்
அக்காரக்கனியே! * உன்னையானே.
2999 யானேயென்னை அறியகிலாதே *
யானேயென்தனதே என்றிருந்தேன் *
யானேநீ என்னுடைமையும்நீயே *
வானேயேத்தும் எம்வானவரேறே!
3000 ஏறேலேழும்வென்று ஏர்கொளிலங்கையை *
நீறேசெய்த நெடுஞ்சுடர்ச்சோதி! *
தேறேலென்னை உன்பொன்னடிச்சேர்த்துஒல்லை *
வேறேபோக எஞ்ஞான்றும்விடலே.
3001 விடலில் சக்கரத்தண்ணலை * மேவல்
விடலில் வண்குருகூர்ச்சடகோபன்சொல் *
கெடலிலாயிரத்துள் இவைபத்தும் *
கெடலில்வீடுசெய்யும் கிளர்வார்க்கே. (2)