
1089 பூண்டவத்தம்பிறர்க் கடைந்துதொண்டுபட்டுப்
பொய்ந்நூலை மெய்ந்நூலென்றென்றுமோதி
மாண்டு * அவத்தம்போகாதேவம்மின் எந்தை
என்வணங்கப்படுவானை * கணங்களேத்தும்
நீண்டவத்தைக்கருமுகிலை எம்மான்தன்னை
நின்றவூர்நித்திலத்தைத் தொத்தார்சோலை *
காண்டவத்தைக்கனலெரிவாய்ப்பெய்வித்தானைக்
கண்டதுநான்கடல்மல்லைத்தலசயனத்தே. (2)
1090 உடம்புருவில்மூன்றொன்றாய் மூர்த்திவேறாய்
உலகுய்யநின்றானை * அன்றுபேய்ச்சி
விடம்பருகுவித்தகனைக் கன்றுமேய்த்து
விளையாடவல்லானை, வரைமீகானில் *
தடம்பருகுகருமுகிலைத் தஞ்சைக்கோயில்
தவநெறிக்குஓர்பெருநெறியை, வையங்காக்கும் *
கடும்பரிமேல்கற்கியைநான் கண்டுகொண்டேன்
கடிபொழில்சூழ்கடல்மல்லைத்தலசயனத்தே.
1092 பாய்ந்தானைத் திரிசகடம்பாறிவீழப்
பாலகனாய்ஆலிலையில் பள்ளியின்ப
மேய்ந்தானை * இலங்கொளிசேர்மணிக்குன்றன்ன
ஈரிரண்டுமால்வரைத்தோளெம்மான்தன்னை *
தோய்ந்தானைநிலமகள்தோள் தூதிற்சென்று அப்
பொய்யறைவாய்ப்புகப்பெய்தமல்லர்மங்கக்
காய்ந்தானை * எம்மானைக் கண்டுகொண்டேன்
கடிபொழில்சூழ்கடல்மல்லைத்தலசயனத்தே.