1087 நெடுமாலவன்மேவியநீர்மலைமேல்
நிலவும்புகழ்மங்கையர்கோன் * அமரில்
கடமாகளியானைவல்லான்கலிய
னொலிசெய் தமிழ்மாலைவல்லார்க்கு * உடனே
விடுமால்வினை வேண்டிடில்மேலுலகும்
எளிதாயிடும், அன்றிஇலங்கொலிசேர் *
கொடுமாகடல்வையகம்ஆண்டு மதிக்
குடைமன்னவராய்அடிகூடுவரே. (2)