PT 2.5.4

The City of Lord Kaṇṇa is Kaṭalmallai

கண்ணபிரான் ஊர் கடல்மல்லை

1091 பேய்த்தாயைமுலையுண்ட பிள்ளைதன்னைப்

பிணைமருப்பிற்கருங்களிற்றை பிணைமான் நோக்கின் *

ஆய்த்தாயர்தயிர்வெண்ணெயமர்ந்தகோவை

அந்தணர்தம் அமுதத்தை, குரவைமுன்னே

கோத்தானை * குடமாடுகூத்தன்றன்னைக்

கோகுலங்கள்தளராமல்குன்றமேந்திக்

காத்தானை * எம்மானைக் கண்டுகொண்டேன்

கடிபொழில்சூழ்கடல்மல்லைத்தலசயனத்தே.

Text size