Chapter 1

When will I see my god, the lord of Thiruvarangam - (இருள் இரிய)

அரங்கப்பெருமானை என்று கண்டு மகிழ்வேன் எனல்
When will I see my god, the lord of Thiruvarangam - (இருள் இரிய)
Introduction & Details
Recitation
Translation

PMT 1.1

647 இருளிரியச்சுடர்மணிகளிமைக்கும்நெற்றி

இனத்துத்தியணிபணமாயிரங்களார்ந்த *

அரவரசப்பெருஞ்சோதியனந்தனென்னும்

அணிவிளங்குமுயர்வெள்ளையணையைமேவி *

திருவரங்கப்பெருநகருள்தெண்ணீர்ப்பொன்னி

திரைக்கையாலடிவருடப்பள்ளிகொள்ளும் *

கருமணியைக்கோமளத்தைக்கண்டுகொண்டுஎன்

கண்ணிணைகளென்றுகொலோகளிக்கும்நாளே? (2)

PMT 1.6

652 அளிமலர்மேலயனரனிந்திரனோடுஏனை

அமரர்கள்தம்குழுவுமரம்பையரும்மற்றும் *

தெளிமதிசேர்முனிவர்கள்தம்குழுவுமுந்தித்

திசைதிசையில்மலர்தூவிச்சென்றுசேரும் *

களிமலர்சேர்பொழிலரங்கத்துரகமேறிக்

கண்வளரும்கடல்வண்ணர்கமலக்கண்ணும் *

ஒளிமதிசேர்திருமுகமும்கண்டு கொண்டு என்

உள்ளமிகஎன்றுகொலோவுருகும்நாளே?

PMT 1.7

653 மறந்திகழுமனமொழித்துவஞ்சமாற்றி

ஐம்புலன்களடக்கியிடர்ப்பாரத்துன்பம்

துறந்து * இருமுப்பொழுதேத்தியெல்லையில்லாத்

தொன்னெறிக்கண்நிலைநின்றதொண்டரான *

அறம்திகழும்மனத்தவர்தம்கதியைப்பொன்னி

அணியரங்கத்தரவணையில்பள்ளிகொள்ளும் *

நிறம்திகழும்மாயோனைக் கண்டு என்கண்கள்

நீர்மல்கஎன்றுகொலோநிற்கும்நாளே?

PMT 1.11

657 திடர்விளங்குகரைப்பொன்னிநடுவுபாட்டுத்

திருவரங்கதரவணையில்பள்ளிகொள்ளும் *

கடல்விளங்குகருமேனியம்மான்றன்னைக்

கண்ணாரக்கண்டுகக்கும்காதல்தன்னால் *

குடைவிளங்குவிறல்தானைக்கொற்றவொள்வாள்

கூடலர்கோன்கொடைகுலசேகரன்சொற்செய்த *

நடைவிளங்குதமிழ்மாலைபத்தும்வல்லார்

நலந்திகழ்நாரணனடிக்கீழ்நண்ணுவாரே (2)