Your browser does not support the audio element.
audio
658 தேட்டரும்திறல்தேனினைத் தென்னரங்கனை * திருமாதுவாழ்
வாட்டமில்வனமாலைமார்வனைவாழ்த்தி மால்கொள்சிந்தையராய் *
ஆட்டமேவியலந்தழைத்து அயர்வெய்தும்மெய்யடியார்கள்தம் *
ஈட்டம்கண்டிடக்கூடுமேல் அதுகாணும்கண்பயனாவதே (2)
659 தோடுலாமலர்மங்கை தோளிணைதோய்ந்ததும் * சுடர் வாளியால்
நீடுமாமரம் செற்றதும்நிரைமேய்த்தும் இவையேநினைந்து *
ஆடிப்பாடி அரங்கவோ! என்றழைக்கும்தொண்ட ரடிப்பொடி
ஆடநாம்பெறில் * கங்கைநீர்குடைந்தாடும்வேட்கையென்னாவதே?
660 ஏறடர்த்ததும்ஏனமாய்நிலம்கீண்டதும் முன்னிராமனாய் *
மாறடர்த்ததும்மண்ணளந்ததும் சொல்லிப்பாடி * வண்பொன்னிப்பே
ராறுபோல்வரும் கண்ணநீர்கொண்டு அரங்கன்கோயில் திருமுற்றம் *
சேறுசெய்தொண்டர்சேவடிச்செழுஞ்சேறு என்சென்னிக்கணிவனே.
661 தோய்த்ததண்தயிர்வெண்ணெய்பாலுடன்உண்டலும் உடன் றாய்ச்சிகண்டு *
ஆர்த்ததோளுடையெம்பிரான் என்னரங்கனுக்கடியார்களாய் *
நாத்தழும்பெழநாரணாவென்றழைத்து மெய்தழும்பத்தொழு
தேத்தி * இன்புறும்தொண்டர்சேவடி ஏத்திவாழ்த்துமென்நெஞ்சமே.
662 பொய்சிலைக்குரலேற்றெருத்தமிறுத்துப் போரரவீர்த்தகோன் *
செய்சிலைச்சுடர்சூழொளித் திண்ணமாமதிள்தென்னரங்கனாம் *
மெய்சிலைக்கருமேகமொன்று தம்நெஞ்சில்நின்றுதிகழப்போய் *
மெய்சிலிர்ப்பவர்தம்மையேநினைந் தென்மனம்மெய்சிலிர்க்குமே.
663 ஆதியந்தமனந்தமற்புதமான வானவர்தம்பிரான் *
பாதமாமலர்சூடும்பத்தியிலாத பாவிகளுய்ந்திட *
தீதில்நன்னெறிகாட்டி எங்கும்திரிந்தரங்கனெம்மானுக்கே *
காதல்செய்தொண்டர்க்கெப்பிறப்பிலும் காதல்செய்யுமென்னெஞ்சமே.
664 காரினம்புரை மேனிநல்கதிர் முத்தவெண்ணகைச் செய்யவாய் *
ஆரமார்வனரங்கனென்னும் அரும்பெருஞ்சுடரொன்றினை *
சேரும்நெஞ்சினராகிச் சேர்ந்துகசிந்திழிந்தகண்ணீர்களால் *
வாரநிற்பவர்தாளிணைக்கு ஒருவாரமாகுமென்னெஞ்சமே.
665 மாலையுற்றகடல்கிடந்தவன் வண்டுகிண்டுநறுந்துழாய் *
மாலையுற்றவரைப்பெருந்திருமார்வனை மலர்க்கண்ணனை *
மாலையுற்றெழுந்தாடிப்பாடித் திரிந்தரங்கனெம்மானுக்கே *
மாலையுற்றிடும்தொண்டர்வாழ்வுக்கு மாலையுற்றதென்நெஞ்சமே.
666 மொய்த்துக்கண்பனிசோரமெய்கள்சிலிர்ப்ப ஏங்கி யிளைத்துநின்று *
எய்த்துக்கும்பிடுநட்டமிட்டெழுந்து ஆடிப்பாடியிறைஞ்சி * என்
அத்தனச்சனரங்கனுக்கு அடியார்களாகி * அவனுக்கே
பித்தராமவர்பித்தரல்லர்கள் மற்றையார்முற்றும்பித்தரே.
667 அல்லிமாமலர்மங்கைநாதன்அரங்கன்மெய்யடியார்கள்தம் *
எல்லையிலடிமைத்திறத்தினில்என்றுமேவுமனத்தனாம் *
கொல்லிகாவலன்கூடல்நாயகன் கோழிக்கோன்குலசேகரன் *
சொல்லினின்தமிழ்மாலைவல்லவர் தொண்டர்தொண்டர்களாவரே. (2)