Your browser does not support the audio element.
audio
3684 பண்டைநாளாலேநின்திருவருளும்
பங்கயத்தாள்திருவருளும்
கொண்டு * நின்கோயில்சீய்த்துப்பல்படிகால்
குடிகுடிவழிவந்தாட்செய்யும் *
தொண்டரோர்க்கருளிச்சோதிவாய்திறந்துன்
தாமரைக்கண்களால்நோக்காய் *
தெண்டிரைப்பொருநல்தண்பணைசூழ்ந்த
திருபுளிங்குடிக்கிடந்தானே. (2)
3685 குடிகிடந்தாக்கஞ்செய்து நின்தீர்த்த
அடிமைக்குற்றேவல்செய்து * உன்பொன்
அடிக்கடவாதேவழிவருகின்ற
அடியரோர்க்கருளி * நீயொருநாள்
படிக்களவாகநிமிர்த்த நின்பாத
பங்கயமேதலைக்கணியாய் *
கொடிக்கொள்பொன்மதிள்சூழ் குளிர்வயல்சோலைத்
திருபுளிங்குடிக்கிடந்தானே!
3686 கிடந்தநாள்கிடந்தாய்எத்தனைகாலம்
கிடத்தி? உன்திருவுடம்பசைய *
தொடர்ந்துகுற்றவேல்செய்து தொல்லடிமை
வழிவரும்தொண்டரோர்க்கருளி *
தடங்கொள்தாமரைக்கண்விழித்து
நீயெழுந்துஉன்தாமரைமங்கையும்நீயும் *
இடங்கொள்மூவுலகும்தொழவிருந்தருளாய்
3687 புளிங்குடிக்கிடந்துவரகுணமங்கையிருந்து
வைகுந்தத்துள்நின்று *
தெளிந்தவென்சிந்தையகங்கழியாதே
என்னையாள்வாய்! எனக்கருளி *
நளிந்தசீருலகமூன்றுடன்வியப்ப
நாங்கள்கூத்தாடிநின்றார்ப்ப *
பளிங்குநீர்முகிலின்பவளம்போல்
கனிவாய்சிவப்ப நீகாணவாராயே.
3688 பவளம்போற்கனிவாய்சிவப்ப
நீகாணவந்துநின்பல்நிலாமுத்தம் *
தவழ்கதிர்முறுவல்செய்து
நின்திருக்கண்தாமரைதயங்கநின்றருளாய் *
பவளநன்படர்க்கீழ்ச்சங்குறைபொருநல்
தண்திருப்புளிங்குடிக்கிடந்தாய்! *
கவளமாகளிற்றினிடர்கெடத் தடத்துக்
காய்சினப்பறவையூர்ந்தானே!
3689 காய்சினப்பறவையூர்ந்து பொன்மலையின்
மீமிசைக்கார்முகில்போல *
மாசினமாலிமாலிமானென்று
அங்குஅவர்படக்கனன்றுமுன்நின்ற *
காய்சினவேந்தே! கதிர்முடியானே!
கலிவயல்திருப்புளிங்குடியாய்! *
காய்சினவாழிசங்குவாள்வில்
தண்டேந்தி எம்மிடர்கடிவானே. (2)
3690 எம்மிடர்கடிந்திங்கென்னையாள்வானே!
இமையவர்தமக்குமாங்கனையாய்! *
செம்மடல்மலரும்தாமரைப்பழனத்
நம்முடையடியர்கவ்வைகண்டுகந்து
நாம்களித்துளநலங்கூர *
இம்மடவுலகர்காணநீயொருநாள்
இருந்திடாய்எங்கள்கண்முகப்பே.
3691 எங்கள்கண்முகப்பேயுலகர்களெல்லாம்
இணையடிதொழுதெழுந்திறைஞ்சி *
தங்களன்பாரத்தமதுசொல்வலத்தால்
தலைத்தலைச்சிறந்தபூசிப்ப *
திங்கள்சேர்மாடத்திருப்புளிங்குடியாய்!
திருவைகுந்தத்துள்ளாய்! தேவா! *
இங்கண்மாஞாலத்திதனுளுமொருநாள்
இருந்திடாய் வீற்றிடங்கொண்டே.
3692 வீற்றிடங்கொண்டுவியன்கொள்மாஞாலத்து
இதனுளுமிருந்திடாய் * அடியோம்
போற்றியோவாதேகண்ணினைகுளிரப்
புதுமலராகத்தைப்பருக *
சேற்றிளவாளைசெந்நெலூடுகளும்
செழும்பணைத்திருப்புளிங்குடியாய்! *
கூற்றமாய்அசுரர்குலமுதலரிந்த
கொடுவினைப்படைகள்வல்லானே!
3693 கொடுவினைப்படைகள்வல்லையாய்
அமரர்க்கிடர்கெடஅசுரர்கட்கிடர்செய் *
கடுவினைநஞ்சே! என்னுடையமுதே!
வடிவிணையில்லாமலர்மகள் மற்றை
நிலமகள்பிடிக்கும்மெல்லடியை *
கொடுவினையேனும்பிடிக்கநீயொருநாள்
கூவுதல்வருதல்செய்யாயே.
3694 கூவுதல்வருதல்செய்திடாயென்று
குரைகடல்கடைந்தவன்தன்னை *
மேவிநன்கமர்ந்தவியன்புனல்பொருநல்
வழுதிநாடன்சடகோபன் *
நாவியல்பாடலாயிரத்துள்ளும்
இவையுமோர்பத்தும்வல்லார்கள் *
ஓவுதலின்றியுலகம்மூன்றளந்தான்
அடியிணையுள்ளத்தோர்வாரே. (2)