Your browser does not support the audio element.
audio
3563 தேவிமாராவார்திருமகள்பூமி
ஏவமற்றமரராட்செய்வார் *
மேவியவுலகம்மூன்றவையாட்சி
வேண்டுவேண்டுருவம்நின்னுருவம் *
பாவியேன்தன்னையடுகின்ற
கமலக்கண்ணது ஓர்பவளவாய்மணியே! *
ஆவியே! அமுதே! அலைகடல்கடைந்த
அப்பனே! காணுமாறருளாய். (2)
3564 காணுமாறருளாயென்றென்றேகலங்கிக்
கண்ணநீரலமர * வினையேன்
பேணுமாறெல்லாம்பேணி நின்பெயரே
பிதற்றுமாறருளெனக்கந்தோ! *
காணுமாறருளாய்காகுத்தா! கண்ணா!
தொண்டனேன்கற்பகக்கனியே! *
பேணுவாரமுதே! பெரியதண்புனல்சூழ்
பெருநிலமெடுத்தபேராளா!
3565 எடுத்தபேராளன்நந்தகோபன்தன்
இன்னுயிர்ச்சிறுவனே! * அசோதைக்கு
அடுத்தபேரின்பக்குலவிளங்களிறே!
அடியனேன்பெரியவம்மானே! *
கடுத்தபோரவுணனுடலிருபிளவாக்
கையுகிராண்டவெங்கடலே? *
அடுத்ததோருருவாய்இன்றுநீவாராய்
எங்ஙனம்தேறுவருமரே?
3566 உமருகந்துகந்தவுருவம்நின்னுருவமாகி
உன்தனக்கன்பரானா
ரவர் * உகந்தமர்ந்தசெய்கையுன்மாயை
அறிவொன்றும்சங்கிப்பன்வினையேன் *
அமரதுபண்ணியகலிடம்புடைசூழ்
அடுபடையவித்தஅம்மானே! *
அமரர்தமமுதே! அசுரர்கள்நஞ்சே!
என்னுடையாருயிரேயோ!
3567 ஆருயிரேயோ! அகலிடமுழுதும்
படைத்திடந்துண்டுமிழ்ந்தளந்த *
பேருயிரேயோ! பெரியநீர்படைத்து அங்குறைந்தது
கடைந்தடைத்துடைத்த *
சீரியரேயோ! மனிசர்க்குத்தேவர்போலத்
தேவர்க்கும்தேவாவோ! *
ஒருயிரேயோ! உலகங்கட்கெல்லாம்
உன்னைநானெங்குவந்துறுகோ?
3568 எங்குவந்துறுகோ! என்னையாள்வானே!
ஏழுலகங்களும்நீயே *
அங்கவர்க்கமைத்ததெய்வமும்நீயே
அவற்றவைகருமமும்நீயே *
பொங்கியபுறம்பாற்பொருளுளவேலும்
அவையுமோநீயின்னேயானால் *
மங்கியஅருவாம்நேர்ப்பமும்நீயே
வான்புலனிறந்ததும்நீயே.
3569 இறந்ததும்நீயேஎதிர்ந்ததும்நீயே
நிகழ்வதோநீயின்னேயானால் *
சிறந்தநின்தன்மையதுவிதுவுதுவென்று
கறந்தபால்நெய்யே! நெய்யினின்சுவையே!
கடலினுளமுதமே! * அமுதிற்
பிறந்தஇன்சுவையே! சுவையதுபயனே!
பின்னைதோள்மணந்தபேராயா!
3570 மணந்தபேராயா! மாயத்தால்முழுதும்
வல்வினையேனையீர்கின்ற *
குணங்களையுடையாய்! அசுரர்வன்கையர்கூற்றமே!
கொடியபுள்ளுயர்த்தாய் *
பணங்களாயிரமுடையபைந்நாகப்பள்ளியாய்!
பாற்கடற்சேர்ப்பா! *
வணங்குமாறறியேன்மனமும்
வாசகமும் செய்கையும் யானும்நீதானே.
3571 யானும்நீதானேயாவதோமெய்யே
அருநரகவையும்நீயானால் *
வானுயரின்பமெய்திலென்?
மற்றைநரகமேயெய்திலென்? எனிலும் *
யானும்நீதானாய்த்தெளிதொறும்நன்றும்
அஞ்சுவன் நரகம்நானடைதல் *
வானுயரின்பம்மன்னிவீற்றிருந்தாய்!
அருளுநின்தாள்களையெனக்கே.
3572 தாள்களையெனக்கேதலைத்தலைசிறப்பத்
தந்த பேருதவிக்கைம்மாறா *
தோள்களையாரத்தழுவி என்னுயிரை
அறவிலைசெய்தனன்சோதீ *
தோள்களாயிரத்தாய்! முடிகளாயிரத்தாய்!
துணைமலர்க்கண்களாயிரத்தாய்! *
தாள்களாயிரத்தாய்! பேர்களாயிரத்தாய்!
தமியனேன்பெரியவப்பனே.
3573 பெரியவப்பனைப்பிரமனப்பனை
உருத்திரனப்பனை * முனிவர்க்
குரியவப்பனையமரரப்பனை
உலகுக்கோர்தனியப்பன்தன்னை *
பெரியவண்குருகூர்ச்சடகோபன்
பேணினஆயிரத்துள்ளும் *
உரியசொல்மாலையிவையும்பத்து இவற்றால்
உய்யலாம்தொண்டீர்! நங்கட்கே. (2)