Your browser does not support the audio element.
audio
3552 இன்பம்பயக்க எழில்மலர்மாதரும்தானும் * இவ்வேழுலகை
இன்பம்பயக்கஇனிதுடன்வீற்றிருந்து ஆள்கின்றஎங்கள்பிரான் *
அன்புற்றமர்ந்துறைகின்ற அணிபொழில்சூழ்திருவாறன்விளை *
அன்புற்றமர்ந்துவலஞ்செய்து கைதொழும்நாள்களு மாகுங்கொலோ? (2)
3553 ஆகுங்கொல்? ஐயமொன்றின்றிஅகலிடம்முற்றவும் * ஈரடியே
ஆகும்பரிசுநிமிர்ந்த திருக்குறளப்பனமர்ந்துறையும் *
மாகந்திகழ்கொடிமாடங்கள்நீடு மதிள்திருவாறன்விளை *
மாகந்தநீர்கொண்டுதூவிவலஞ்செய்து கைதொழக் கூடுங்கொலோ?
3554 கூடுங்கொல்? வைகலும் கோவிந்தனைமதுசூதனைக் கோளரியை *
ஆடும்பறவைமிசைக்கண்டு கைதொழுதன்றி யவனுறையும் *
பாடும்பெரும்புகழ்நான்மறைவேள்வியைந்து ஆறங்கம் பன்னினர்வாழ் *
நீடுபொழில்திருவாறன்விளைதொழ வாய்க்குங்கொல்? நிச்சலுமே.
3555 வாய்க்குங்கொல்? நிச்சலும்எப்பொழுதும்மனத்துஈங்கு நினைக்கப்பெற *
வாய்க்கும்கரும்பும்பெருஞ்செந்நெலும் வயல்சூழ் திருவாறன்விளை *
வாய்க்கும்பெரும்புகழ்மூவுலகீசன் வடமதுரைப்பிறந்த *
வாய்க்கும்மணிநிறக்கண்ணபிரான்றன் மலரடிப் போதுகளே.
3556 மலரடிப்போதுகள்என்னெஞ்சத்தெப்பொழுதும்இருத்தி வணங்க *
பலரடியார்முன்பருளிய பாம்பணையப்பனமர்ந்துறையும் *
மலரின்மணிநெடுமாடங்கள்நீடு மதிள்திருவாறன்விளை *
உலகமலிபுகழ்பாட நம்மேல்வினையொன்றும்நில்லா கெடுமே.
3557 ஒன்றும்நில்லாகெடும்முற்றவும்தீவினை உள்ளித்தொழுமிந் தொண்டீர்! *
அன்றங்கமர்வென்றுஉருப்பிணிநங்கை அணிநெடுந்தோள் புணர்ந்தான் *
என்றுமெப்போதுமென்னெஞ்சம்துதிப்ப உள்ளே யிருக்கின்றபிரான் *
நின்றவணிதிருவாறன்விளையென்னும் நீள்நகரமதுவே.
3558 நீணகரமதுவேமலர்ச்சோலைகள்சூழ் திருவாறன்விளை *
நீணகரத்துறைகின்றபிரான் நெடுமால்கண்ணன் விண்ணவர்கோன் *
வாணபுரம்புக்குமுக்கட்பிரானைத்தொலைய வெம்போர்கள் செய்து *
வாணனையாயிரந்தோள்துணித்தான்சரணன்றி மற்றொன்றிலமே.
3559 அன்றிமற்றொன்றிலம்நின்சரணேயென்று அகலிரும் பொய்கையின்வாய் *
நின்றுதன்நீள்கழலேத்திய ஆனையின்நெஞ்சிடர்தீர்த்தபிரான் *
சென்றங்கினிதுறைகின்ற செழும்பொழில்சூழ்திருவாறன்விளை *
ஒன்றிவலஞ்செய்யவொன்றுமோ? தீவினையுள்ளத்தின் சார்வல்லவே.
3560 தீவினையுள்ளத்தின்சார்வல்லவாகித் தெளிவிசும் பேறலுற்றால் *
நாவினுள்ளும்உள்ளத்துள்ளும் அமைந்ததொழிலினுள்ளும் நவின்று *
யாவரும்வந்துவணங்கும்பொழில் திருவாறன்விளையதனை *
மேவிவலஞ்செய்துகைதொழக்கூடுங்கொல்? என்னும் என்சிந்தனையே.
3561 சிந்தைமற்றொன்றின்திறத்ததல்லாத்தன்மை தேவபிரானறியும் *
சிந்தையினால் செய்வதானறியாதன மாயங்களொன்றுமில்லை *
சிந்தையினால்சொல்லினால்செய்கையால் நிலத்தேவர்குழு வணங்கும் *
சிந்தைமகிழ்திருவாறன்விளையுறை தீர்த்தனுக்கற்றபின்னே.
3562 தீர்த்தனுக்கற்றபின் மற்றோர்சரணில்லையென் றெண்ணி * தீர்த்தனுக்கே
தீர்த்தமனத்தனனாகிச் செழுங்குருகூர்ச்சடகோபன் சொன்ன *
தீர்த்தங்களாயிரத்துள் இவைபத்தும்வல்லார்களை * தேவர்வைகல்
தீர்த்தங்களேயென்றுபூசித்துநல்கியுரைப்பார் தம் தேவியர்க்கே. (2)