2062 பட்டுடுக்கும் அயர்த்திரங்கும்பாவைபேணாள்
பனிநெடுங்கண்ணீர்ததும்பப்பள்ளிகொள்ளாள் *
எள்துணைப்போது என்குடங்காலிருக்ககில்லாள்
எம்பெருமான்திருவரங்கம்எங்கே? என்னும் *
மட்டுவிக்கிமணிவண்டுமுரலும்கூந்தல்
மடமானைஇதுசெய்தார் தம்மை * மெய்யே
கட்டுவிச்சிசொல்லென்னச்சொன்னாள் நங்காய்!
கடல்வண்ணர்இதுசெய்தார்காப்பாராரே?
2064 கல்லெடுத்துக்கல்மாரிகாத்தாய்! என்றும்
காமருபூங்கச்சியூரகத்தாய் என்றும் *
வில்லிறுத்துமெல்லியல்தோள்தோய்ந்தாய்! என்றும்
வெஃகாவில்துயிலமர்ந்தவேந்தே! என்றும் *
மல்லடர்த்துமல்லரைஅன்றுஅட்டாய்! என்றும் *
மாகீண்டகைத்தலத்துஎன்மைந்தா! என்றும் *
சொல்லெடுத்துத்தன்கிளியைச்சொல்லேயென்று
துணைமுலைமேல்துளிசோரச்சோர்கின்றாளே.
2066 கல்லுயர்ந்தநெடுமதிள்சூழ்கச்சிமேய
களிறு! என்றும் கடல்கிடந்தகனியே! என்றும் *
அல்லியம்பூமலர்ப்பொய்கைப்பழனவேலி
அணியழுந்தூர்நின்றுகந்தஅம்மான்! என்றும் *
சொல்லுயர்ந்தநெடுவீணைமுலைமேல்தாங்கித்
தூமுறுவல்நகைஇறையேதோன்றநக்கு *
மெல்விரல்கள்சிவப்பெய்தத்தடவிஆங்கே
மென்கிளிபோல்மிகமிழற்றும்என்பேதையே. (2)
2067 கன்றுமேய்த்துஇனிதுகந்தகாளாய்! என்றும் *
கடிபொழில்சூழ்கணபுரத்துஎன்கனியே! என்றும் *
மன்றமரக்கூத்தாடிமகிழ்ந்தாய்! என்றும் *
வடதிருவேங்கடம்மேயமைந்தா! என்றும் *
வென்றசுரர்குலங்களைந்தவேந்தே! என்றும் *
விரிபொழில்சூழ்திருநறையூர்நின்றாய்! என்றும் *
துன்றுகுழல்கருநிறத்தென்துணையே! என்றும்
துணைமுலைமேல்துளிசோரச்சோர்கின்றாளே. (2)