Your browser does not support the audio element.
audio
1648 சிலையிலங்குபொன்னாழி
திண்படைதண்டொண்சங்கமென்கின்றாளால் *
மலையிலங்குதோள்நான்கே
மற்றவனுக்கெற்றேகாணென்கின்றாளால் *
முலையிலங்குபூம்பயலை
முன்போடஅன்போடியிருக்கின்றாளால் *
கலையிலங்குமொழியாளர்
கண்ணபுரத்தம்மானைக்கண்டாள்கொலோ? (2)
1649 செருவரைமுன்னாசறுத்த சிலையன்றோ?
கைத்தலத்ததென்கின்றாளால் *
பொருவரைமுன்போர்தொலைத்த
பொன்னாழிமற்றொருகைஎன்கின்றாளால் *
ஒருவரையும்நின்னொப்பா
ரொப்பிலர்என்னப்பா! என்கின்றாளால் *
கருவரைபோல்நின்றானைக்
1650 துன்னுமாமணிமுடிமேல்துழாயலங்கல்
தோன்றுமாலென்கின்றாளால் *
மின்னுமாமணிமகரகுண்டலங்கள்
வில்வீசுமென்கின்றாளால் *
பொன்னின்மாமணியாரம்
அணியாகத்திலங்குமாலென்கின் றாளால் *
கன்னிமா மதிள்புடைசூழ்
கண்ணபுரத்தம்மானைக்கண்டாள்கொலோ?
1651 தாராயதண்துளப
வண்டுழுதவரைமார்பனென்கின்றாளால் *
போரானைக்கொம்பொசித்த
புட்பாகன்என்னம்மானென்கின்றாளால் *
ஆரானும்காண்மின்கள்
அம்பவளம்வாயவனுக்கென்கின்றாளால் *
கார்வானம்நின்றதிரும்
1652 அடித்தலமும்தாமரையே
அங்கைகளும்பங்கயமேயென்கின்றாளால் *
முடித்தலமும்பொற்பூணும்
என்நெஞ்சத்துள் ளகலாதென்கின்றாளால் *
வடித்தடங்கண்மலரவளோ
வரையாகத்துள்ளிருப்பாளென்கின்றாளால் *
கடிக்கமலம்கள்ளுகுக்கும்
கண்ணபுரத்தம்மானைக்கண்டாள்கொலோ?
1653 பேராயிரமுடையபேராளன் பேராளனென்கின்றாளால் *
ஏரார்கனமகரகுண்டலத்தன் எண்தோளனென்கின்றாளால் *
நீரார்மழைமுகிலே நீள்வரையேஒக்குமாலென்கின்றாளால் *
காரார் வயலமரும் கண்ணபுரத்தம்மானைக்கண்டாள்கொலோ?
1654 செவ்வரத்தவுடையாடை
அதன்மேலோர்சிவளிகைக்கச்சென்கின்றாளால் *
அவ்வரத்தவடியிணையும்
மைவளர்க்கும்மணியுருவம்
மரகதமோ! மழைமுகிலோ! என்கின்றாளால் *
கைவளர்க்குமழலாளர்
1655 கொற்றப்புள்ளொன்றேறி
மன்னூடேவருகின்றானென்கின்றாளால் *
வெற்றிப்போரிந்திரற்கும்
இந்திரனேயொக்குமாலென்கின் றாளால் *
பெற்றக்கால்அவனாகம்
பெண்பிறந்தோமுய்யோமோ! என்கின்றாளால் *
கற்றநூல்மறையாளர்
1656 வண்டமரும்வனமாலை
மணிமுடிமேல்மணநாறுமென்கின்றாளால் *
உண்டிவர்பாலன்பெனக்கென்று
ஒருகாலும்பிரிகிலேனென்கின்றாளால் *
பண்டிவரைக்கண்டறிவதுஎவ்வூரில்?
யாமென்றேபயில்கின்றாளால் *
கண்டவர்தம்மனம்வழங்கும்
1657 மாவளருமென்னோக்கி
மாதராள்மாயவனைக்கண்டாளென்று *
காவளரும்கடிபொழில்சூழ்
கண்ணபுரத்தம்மானைக்கலியன்சொன்ன *
பாவளரும்தமிழ்மாலை
பன்னியநூல்இவையைந்துமைந்தும்வல்லார் *
பூவளரும்கற்பகம்சேர்பொன்னுலகில்
மன்னவராய்ப்புகழ்தக்கோரே. (2)